#INDvsENG ஒருநாள் தொடர்: கண்டிப்பா அவங்க 2 பேரும் தொடக்க வீரர்கள்..! உறுதிப்படுத்திய கேப்டன் கோலி

By karthikeyan VFirst Published Mar 22, 2021, 4:54 PM IST
Highlights

ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க ஜோடியை கேப்டன் கோலி உறுதிப்படுத்தியுள்ளார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டி வரும் 23ம் தேதி புனேவில் நடக்கிறது. 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் அடுத்த 2 ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன.

இந்நிலையில், ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் தொடக்க ஜோடியை கேப்டன் கோலி உறுதிப்படுத்தியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் ரோஹித் - ராகுல் தான் முதன்மை தொடக்க ஜோடி. ஆனால் ராகுல் ஃபார்மில் இல்லாமல் முதல் 4 டி20 போட்டிகளிலும் சொதப்பியதால் கடைசி போட்டியில் ரோஹித்துடன் கோலியே தொடக்க வீரராக இறங்கினார்.

ஒருநாள் போட்டிகளில் ரோஹித் - தவான் தான் தொடக்க ஜோடி. ஆனால் தவான் அண்மைக்காலத்தில் சரியாக ஆடவில்லை. விஜய் ஹசாரே தொடரிலும் சொதப்பினார். முதல் டி20 போட்டியில் கிடைத்த வாய்ப்பிலும் சொதப்பினார். எனவே ரோஹித்துடன் தவான் தொடக்க வீரராக இறங்குவாரா அல்லது வேறு எந்த வீரரும் இறங்குவாரா என்பது பெரும் கேள்வியாக இருந்தது.

இந்நிலையில், இதுகுறித்து தெளிவுபடுத்திய கேப்டன் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் ரோஹித் - தவான் ஆகிய இருவரும் தான் தொடக்கவீரர்கள். அதில் எந்தவித சந்தேகமுமில்லை என்று கோலி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
 

click me!