#SLvsIND கடைசி ஒருநாள் போட்டி: மொத்த அணியையும் கொத்தா மாற்றிய இந்தியா.! டாஸ் வென்று முதலில் பேட்டிங்

By karthikeyan VFirst Published Jul 23, 2021, 3:13 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

இந்தியா - இலங்கை இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும்  வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி இன்று நடக்கிறது.

இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இலங்கையை ஒயிட்வாஷ் செய்து தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், ஆறுதல் வெற்றியாவது பெறும் முனைப்பில் இலங்கை அணியும் களமிறங்கியுள்ளன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான், பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி ஏற்கனவே தொடரை வென்றுவிட்டதால், முதல் 2 போட்டிகளில் ஆடாத வீரர்களுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், விக்கெட் கீப்பர் இஷான் கிஷனுக்கு பதிலாக, காயத்தால் முதலிரண்டு போட்டிகளில் ஆடாத சஞ்சு சாம்சன் ஆடுகிறார்.  க்ருணல் பாண்டியாவுக்கு பதிலாக கூடுதல் பேட்ஸ்மேனாக நிதிஷ் ராணா சேர்க்கப்பட்டுள்ளார்.

ஸ்பின்னர்கள் குல்தீப் மற்றும் சாஹல் ஆகிய இருவருக்கும் ஓய்வளித்துவிட்டு, கிருஷ்ணப்பா கௌதம் மற்றும் ராகுல் சாஹர் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஃபாஸ்ட் பவுலர்கள் புவனேஷ்வர் குமார் மற்றும் தீபக் சாஹருக்கு பதிலாக நவ்தீப் சைனி மற்றும் சேத்தன் சக்காரியா ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி:

ஷிகர் தவான்(கேப்டன்), பிரித்வி ஷா, சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், நிதிஷ் ராணா, ஹர்திக் பாண்டியா, கிருஷ்ணப்பா கௌதம், ராகுல் சாஹர், நவ்தீப் சைனி, சேத்தன் சக்காரியா.

இலங்கை அணி:

அவிஷ்கா ஃபெர்னாண்டோ, மினோத் பானுகா(விக்கெட் கீப்பர்), பானுகா ராஜபக்சா, தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, தசுன் ஷனாகா(கேப்டன்), ரமேஷ் மெண்டிஸ், சாமிகா கருணரத்னே, அகிலா தனஞ்செயா, துஷ்மந்தா சமீரா, பிரவீன் ஜெயவிக்ரமா.
 

click me!