Asia Cup: புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியா சூப்பர் பவுலிங்! பாகிஸ்தானை குறைவான ஸ்கோருக்கு சுருட்டிய இந்தியா

Published : Aug 28, 2022, 09:39 PM IST
Asia Cup: புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியா சூப்பர் பவுலிங்! பாகிஸ்தானை குறைவான ஸ்கோருக்கு சுருட்டிய இந்தியா

சுருக்கம்

ஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இந்திய அணிக்கு 148 ரன்கள் என்ற எளிய இலக்கை நிர்ணயித்துள்ளது.  

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இன்று துபாயில் நடந்துவரும் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆடிவருகின்றன. டாஸ் வென்ற இந்திய  அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல்.

பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட்கீப்பர்), ஃபகர் ஜமான், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிஃப் அலி, ஷதாப் கான், முகமது நவாஸ், நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப், ஷாநவாஸ் தஹானி.

பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது. பாகிஸ்தான் அணியின் தொடக்க ஜோடியான பாபர் அசாம் - முகமது ரிஸ்வான் ஜோடி தான் அந்த அணியின் நட்சத்திர மற்றும் அபாயகரமான வீரர்கள். இந்த ஜோடியை தொடக்கத்திலேயே பிரிப்பதில் உறுதியாக இருந்தது இந்திய அணி.

இந்திய அணியின் சீனியர் ஃபாஸ்ட் பவுலரான புவனேஷ்வர் குமார் ரன்னே விட்டுக்கொடுக்காமல் நெருக்கடி கொடுத்தார். அதன்விளைவாக புவனேஷ்வர் குமார் வீசிய 3வது ஓவரில் பெரிய ஷாட்டுக்கு முயற்சி செய்து பாபர் அசாம் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். 

அதனால் பொறுப்பை தனது தோள்களில் சுமந்த முகமது ரிஸ்வான் கடைசி வரை ஆடி பெரிய இன்னிங்ஸ் ஆடவேண்டும் என்பதற்காக நிதானமாக ஆடினார். புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, ஆவேஷ் கான், ஜடேஜா அனைவருமே கட்டுக்கோப்புடன் வீசியதால் வேகமாக ஸ்கோர் செய்யமுடியாமல் திணறிய முகமது ரிஸ்வான் 43 ரன்களுக்கு ஹர்திக் பாண்டியாவின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் குஷ்தில் ஷாவும் (2) ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ஷதாப் கான்(10), ஆசிஃப் ஆலி(9), நசீம் ஷா(0) ஆகிய மூவரையும் புவனேஷ்வர் குமார் வீழ்த்தினார். கடைசியில் ஷாநவாஸ் தஹானி, 6 பந்தில் 2சிக்ஸர்களுடன் 16 ரன்கள் அடிக்க, 19.5 ஓவரில் 147 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது பாகிஸ்தான் அணி.

இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய அணி 148 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டுகிறது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IPL Auction 2026: சிஎஸ்கே வாங்கிய வீரர்கள் யார்? யார்? CSK அணி வீரர்கள் முழு பட்டியல் இதோ!
IPL Auction 2026: விலை போன வீரர்கள் யார்? யார்? விலை போகாத வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட் இதோ!