ஷமி முஸ்லீம் என்பதால் தான் டீம்ல எடுக்கல.. தங்கள் நாட்டை போலவே இந்தியாவையும் நினைத்த பாகிஸ்தானி

By karthikeyan VFirst Published Jul 7, 2019, 3:17 PM IST
Highlights

எதிரணிகளின் மீது ஆதிக்கம் செலுத்தி இந்திய அணி ஆடிவருகிறது. இங்கிலாந்தை தவிர மற்ற அனைத்து அணிகளையுமே வீழ்த்தி வெற்றி கண்டது இந்திய அணி.
 

உலக கோப்பையில் இந்திய அணி சிறப்பாக ஆடிவருகிறது. 15 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

எதிரணிகளின் மீது ஆதிக்கம் செலுத்தி இந்திய அணி ஆடிவருகிறது. இங்கிலாந்தை தவிர மற்ற அனைத்து அணிகளையுமே வீழ்த்தி வெற்றி கண்டது இந்திய அணி.

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கும் பவுலிங்கும் தான் பலமாக உள்ளது. பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகிய மூவருமே அபாரமாக வீசிவருகின்றனர். இந்திய அணி 2 ஃபாஸ்ட் பவுலர்கள், 2 ஸ்பின்னர்களுடன் ஆடுவதுதான் திட்டம். அதனால் தான் பும்ராவுடன் புவனேஷோ அல்லது ஷமியோ ஆடவைக்கப்படுகின்றனர். 

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் குமார் காயமடைந்ததால் அதன்பின்னர் 3 போட்டிகளில் ஷமிதான் ஆடினார். 3 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆனாலும் புவனேஷ்வர் குமார் பவுலிங் ஸ்விங் ஆகும் என்பதால் அவர் தான் இந்திய அணியின் முதல் சாய்ஸ். ஷமி - புவனேஷ்வர் குமார் ஆகிய இருவரில் புவனேஷ்வர் குமாரைத்தான் இந்திய அணி முதல் சாய்ஸாக வைத்துள்ளது. அந்த வகையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் அவர் தான் ஆடினார். 

இந்நிலையில், ஷமி முஸ்லீம் என்பதால் தான் அவருக்கு இந்திய அணியில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்ற பகிரங்கமான குற்றச்சாட்டை பாகிஸ்தான் கிரிக்கெட் அனலிஸ்ட்(பகுப்பாய்வாளர்) ஒருவர் முன்வைத்துள்ளார். 

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொயின் கான் மற்றும் அந்த கிரிக்கெட் அனலிஸ்ட் கலந்துகொண்ட ஒரு விவாதத்தில் பேசிய அந்த அனலிஸ்ட், 3 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரு பவுலரை திடீரென ஓரங்கட்டியுள்ளனர். நானாக இருந்தால் அவரை ஓரங்கட்டியிருக்க மாட்டேன். ஷமி தொடர்ந்து ஆடினால் அதிகமான விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் வந்துவிடுவார். அவரை நீக்கியதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இந்திய அணி நிர்வாகத்துக்கு  ஷமியை உட்கார வைக்க வேண்டும் என்று அழுத்தம் வந்திருக்கும் என நினைக்கிறேன். முஸ்லீம்கள் வளர்ந்துவிடக்கூடாது என்ற கொள்கையை கொண்ட பாஜக, நெருக்கடி கொடுத்து ஷமியை ஓரங்கட்டியிருக்கும் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். 

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. மதச்சார்பற்ற கொள்கையை தீவிரமாக கடைபிடிக்கும் நாட்டின் மீது இப்படியொரு ஆதாரமற்ற குற்றச்சாட்டை அந்த அனலிஸ்ட் வைத்துள்ளார். இந்திய அணியில் அசாருதீன் நீண்ட காலம் கேப்டனாக இருந்திருக்கிறார். ஜாகீர் கான், கைஃப், யூசுஃப் பதான், இர்ஃபான் பதான் என எத்தனையோ முஸ்லீம் மதத்தை சார்ந்த வீரர்கள் முன்னணி வீரர்களாக ஜொலித்துள்ளனர். ஆனால் பாகிஸ்தான் அணியில் முஸ்லீமை தவிர மற்ற மதத்தினரால் சேர்ந்துவிடமுடியாது. தங்கள் நாட்டின் பொதுப்புத்தியை மனதில் வைத்து அதேமாதிரி மற்றவர்களையும் நினைத்து அந்த அனலிஸ்ட் இப்படி கூறியுள்ளார். 

எல்லாரையும் உங்கள மாதிரியே நினைக்கலாமா..?
 

click me!