தோனியின் சிக்ஸரை மட்டுமே பேசுகிறார்கள், மற்ற வீரர்கள் விளையாடவில்லையா? கௌதம் காம்பீர் விமர்சனம்!

Published : Aug 24, 2023, 05:02 PM ISTUpdated : Aug 24, 2023, 05:35 PM IST
தோனியின் சிக்ஸரை மட்டுமே பேசுகிறார்கள், மற்ற வீரர்கள் விளையாடவில்லையா? கௌதம் காம்பீர் விமர்சனம்!

சுருக்கம்

கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தோனி அடித்த சிக்ஸரை மட்டுமே ஒவ்வொருவரும் கொண்டாடும் நிலையில், மற்ற வீரர்களின் பங்களிப்பை மறந்துவிட்டார்கள் என்று கௌதம் காம்பீர் விமர்சனம் செய்துள்ளார்.

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரானது வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதற்கு முன்னதாக ஆசிய கோப்பை தொடர் வரும் 30 ஆம் தேதி தொடங்குகிறது. இது ஒரு புறம் இருக்க இந்திய அணியின் அதிரடி வீரர் கௌதம் காம்பீர், கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தோனி அடித்த சிக்ஸர் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

Chess World Cup: முதல் முறையாக FIDE World Cup சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன்: பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி!

கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் இணைந்து நடத்தின. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 274 ரன்கள் எடுத்தது.

18 வயதான பிரக்ஞானந்தா கடந்து வந்த பாதை!

பின்னர், கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சேவாக் மற்றும் சச்சின் இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். அடுத்து வந்த கௌதம் காம்பீர் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். அவர் 97 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் தோனி மற்றும் யுவராஜ் சிங் இருவரும் இணைந்து கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். தோனி 91 ரன்னுடனும், யுவராஜ் சிங் 21 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆர் பிரக்ஞானந்தாவின் சொத்து மதிப்பு ரூ.83 லட்சமா?

நுவான் குலசேகரா வீசிய 48.2ஆவது ஓவரில் தோனி சிக்ஸர் அடிக்கவே இந்தியா 277 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், தான், தோனி அடித்த சிக்சர் மட்டுமே அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மற்ற வீரர்கள் பற்றி யாரும் பேசுவதில்லை என்று கௌதம் காம்பீர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: தோனி சிக்ஸர் அடித்ததனால் மட்டுமே இந்தியா உலகக் கோப்பையில் ஜெயிக்கவில்லை. அதில், யுவராஜ் சிங் விளையாடியிருக்கிறார், விராட் கோலி ஆகியோரும் சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார்கள்.

மேலும், இந்த உலகக் கோப்பை தொடரில் சேவாக் தனது சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார். ஜாகீர்கான், முனாப் படேல், சுரேஷ் ரெய்னா, சச்சின் டெண்டுல்கர் என்று ஒவ்வொருவரும் தங்களது திறமையை வெளிப்படுத்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA 1st T20: ஹர்சித் ராணா நீக்கம்.. தமிழக வீரருக்கும் இடமில்லை.. இந்திய அணி பிளேயிங் லெவன்!
இந்தியாவுக்காக மீண்டும் களம் இறங்கும் ரோ-கோ எப்போது தெரியுமா? கோலி, ரோஹித்தின் அடுத்த ஒருநாள் போட்டி