சிஎஸ்கே அணி எந்த 3 வீரர்களை தக்கவைக்க வேண்டும்..? கௌதம் கம்பீர் அதிரடி

By karthikeyan VFirst Published Oct 16, 2021, 9:41 PM IST
Highlights

சிஎஸ்கே அணி எந்த 3 வீரர்களை தக்கவைக்க வேண்டும் என்று கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசனில் 4வது முறையாக கோப்பையை வென்றது சிஎஸ்கே அணி. ஐபிஎல் தொடங்கிய 2008ம் ஆண்டிலிருந்து 2019ம் ஆண்டு வரை ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு சென்ற பெருமையை பெற்ற சிஎஸ்கே அணி, 2020 சீசனில் முதல் முறையாக லீக் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றமளித்தது.

அந்த படுதோல்வியிலிருந்து மீண்டுவந்து இந்த சீசனில் 4வது முறையாக கோப்பையை வென்றது சிஎஸ்கே அணி. இந்த சீசனில் சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணம், அந்த அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டுப்ளெசிஸ். இந்த சீசனில் அதிக ரன்களை குவித்த வீரர்களில் முதலிரண்டு இடங்களை பிடித்தனர் ருதுராஜ்(635) மற்றும் டுப்ளெசிஸ்(633). 

சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களான இவர்கள் இருவரும் சேர்ந்து 1268 ரன்களை குவித்தனர். இவர்கள் சிஎஸ்கே அணியின் முக்கியமான வீரர்களாக ஜொலிக்கின்றனர். அடுத்த சீசனில் புதிதாக 2 அணிகள் சேர்க்கப்படுவதால், அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. எனவே ஒவ்வொரு ஐபிஎல் அணியும் 3-4 வீரர்களை தவிர மற்ற அனைத்து வீரர்களையும் கழட்டிவிட்டாக வேண்டும்.

இந்நிலையில், எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கலாம் என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்.

அந்தவகையில், சிஎஸ்கே அணி எந்த 3 வீரர்களை தக்கவைக்கலாம் என்பது குறித்து பேசியுள்ள கௌதம் கம்பீர், ருதுராஜ் கெய்க்வாட், டுப்ளெசிஸ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவரையும் தக்கவைக்கலாம் என்று தெரிவித்துள்ளார். 
 

click me!