ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன. ஷார்ஜாவில் மணல்புயல் காரணமாக அரைமணி நேரம் டாஸ் தாமதமாக போடப்பட்டது. 7 மணிக்கு போட வேண்டிய டாஸ் 7.30 மணிக்கு போடப்பட்டது. ஆனால் டாஸ் போட்டு 15 நிமிடத்தில் ஆட்டம் தொடங்கப்பட்டது.
டாஸ் வென்ற சிஎஸ்கே ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் சிஎஸ்கே ஆடுகிறது.
சிஎஸ்கே அணி:
ருதுராஜ் கெய்க்வட், டுப்ளெசிஸ், மொயின் அலி, ரெய்னா, ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜடேஜா, பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்.
ஆனால் ஆர்சிபி அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கைல் ஜாமிசன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சிங்கப்பூர் வீரர் டிம் டேவிட் ஆடுகிறார். அதிரடி வீரரான டிம் டேவிட், ஃபினிஷிங் ரோலை செய்வார் என்ற நம்பிக்கையில் அவர் எடுக்கப்பட்டுள்ளார். மேலும், பேட்ஸ்மேனான சச்சின் பேபியை நீக்கிவிட்டு, கூடுதல் பவுலராக ஃபாஸ்ட் பவுலர் நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆர்சிபி அணி:
விராட் கோலி(கேப்டன்), தேவ்தத் படிக்கல், கேஎஸ் பரத்(விக்கெட் கீப்பர்), மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், டிம் டேவிட், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், நவ்தீப் சைனி.