உலக கோப்பை அரையிறுதியில் அந்த அணி கண்டிப்பா இருக்கும்!! சமிந்தா வாஸ் அதிரடி

By karthikeyan VFirst Published Apr 24, 2019, 4:58 PM IST
Highlights

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்கும் நிலையில், வெஸ்ட் இண்டீஸை தவிர அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. 
 

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்கும் நிலையில், வெஸ்ட் இண்டீஸை தவிர அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. 

உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 அணிகளில் ஒன்றுதான் இந்த உலக கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் வீரர்கள் ஆருடம் தெரிவித்துள்ளனர். 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக ஆடிவருகிறது. இந்திய அணியில் முன்னெப்போதையும் விட ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் வலுவாக உள்ளது. பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகியோர் எதிரணிகளை தெறிக்கவிடுகின்றனர். குல்தீப் - சாஹல் ஜோடி ஸ்பின்னில் மிரட்டுகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கும் வலுவாக உள்ளது. 

அதேபோல இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. அந்த அணி சிறப்பாக இருப்பதுடன் உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது, அந்த அணிக்கு கூடுதல் பலம். அதனால் உலக கோப்பையை இங்கிலாந்து வெல்வதற்கான வாய்ப்புகள் தான் பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது. 

ஸ்மித் மற்றும் வார்னர் அணிக்கு திரும்பியிருப்பதால் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையை மீண்டும் வெல்லும் முனைப்பில் உள்ளது. அந்த அணி பேட்டிங், பவுலிங் என சமபலம் வாய்ந்த அணியாக உள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் சிறந்த அணிகள் தான். 

இவ்வாறு ஒவ்வொரு அணியுமே சிறந்த அணியாக திகழும் நிலையில், பல முன்னாள் வீரர்களும் தங்களது கணிப்பை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், நல்ல பேல்ன்ஸான அணியாக இருக்கும் இந்திய அணி கண்டிப்பாக உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் என இலங்கை முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் சமிந்தா வாஸ் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய வாஸ், இந்திய அணி கடந்த 2-3 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகிறது. நல்ல ஃபாஸ்ட் பவுலர்கள் அணியில் உள்ளனர். இந்திய அணி அனைத்து வகையிலும் சிறந்த அணியாக திகழ்கிறது. எனவே உலக கோப்பையில் இந்திய அணி சிறப்பாக ஆடும். அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறுவது உறுதி என வாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
 

click me!