மிரட்டலான ஃபாஸ்ட் பவுலரை விட்டுட்டு 3 ஸ்பின்னர்களை எடுத்து வச்சுருக்கீங்க! முன்னாள் பவுலிங் கோச் கடும் தாக்கு

By karthikeyan VFirst Published Oct 14, 2022, 5:19 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் உம்ரான் மாலிக்கை எடுக்காததை கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண்.
 

டி20 உலக கோப்பை வரும் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அதற்காக அனைத்து அணிகளும் ஆஸ்திரேலியாவிற்கு சென்று பயிற்சி போட்டிகளில் ஆடி தீவிரமாக தயாராகிவருகின்றன. டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்படும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பயிற்சி போட்டிகளில் ஆடிவருகிறது.

இதையும் படிங்க - 15 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் கிரிக்கெட் ஆடும் இந்திய அணி..? பிசிசிஐ திட்டம்

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

டி20 உலக கோப்பைக்கான அணி தேர்வு விமர்சனத்துக்குள்ளானது. ஷமி, சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயரை அணியில் எடுக்காதது விமர்சனத்துக்குள்ளானது. பும்ரா காயத்தால் விலகியதால் ஷமி - சிராஜ் ஆகிய இருவரில் ஒருவர் அவருக்கு மாற்று வீரராக அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் தான் இந்த டி20 உலக கோப்பையில் ஒரேயொரு பிரச்னையாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேலும், டி20 உலக கோப்பை நடக்கும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்து நன்றாக பவுன்ஸாகும். இந்நிலையில், இந்திய அணியில்  150 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய ஒரு மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்  இல்லாதது ஒரு பின்னடைவாக இருக்கும் என்றும், 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய உம்ரான் மாலிக்கை அணியில் எடுக்காதது தவறு என்று பிரெட் லீ கூட விமர்சித்திருந்தார்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை அரையிறுதியில் எந்த 4 அணிகள் மோதும்..? முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டர் வாசிம் அக்ரம் ஆருடம்

இந்நிலையில், அதே விமர்சனத்தைத்தான் முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருணும் முன்வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய பரத் அருண், உம்ரான் மாலிக் நல்ல வேகத்தில் வீசுகிறார். சரியான ஃபீல்டிங் செட்டப்புடன் ஐபிஎல்லில் அபாரமாக பந்துவீசினார். ஆஸ்திரேலிய ஆடுகளங்களுக்கு இத்தனை ஸ்பின்னர்கள் தேவையில்லை. ஸ்பின்னர்களில் ஒருவரை குறைத்துக்கொண்டு உம்ரான் மாலிக்கை அணியில் எடுத்திருக்கலாம். ஆஸி., ஆடுகளங்களில் பந்து நன்றாக பவுன்ஸாகும். நல்ல வேகத்தில் வீசும் உம்ரான் மாலிக் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார். ஆஸி.,யை பொறுத்தமட்டில் 2 ஸ்பின்னர்கள் போதும். 3 ஸ்பின்னர்கள் தேவையில்லை என்று பரத் அருண் தெரிவித்துள்ளார்.
 

click me!