பலபேரை அவுட்டாக்க ஐடியா கொடுத்தவர் தல தோனி..! அவரையே அவுட்டாக்க வியூகம் வகுத்து கொடுத்த ரிஷப் பண்ட்

By karthikeyan VFirst Published May 10, 2021, 7:49 PM IST
Highlights

தோனியை அவுட்டாக்க ரிஷப் பண்ட் ஐடியா கொடுத்ததாக ஆவேஷ் கான் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசனின் சிறந்த கண்டுபிடிப்பு டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஆடிய ஃபாஸ்ட் பவுலர் ஆவேஷ் கான். நல்ல எகானமியிலும் பந்துவீசி 14 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, டெல்லி கேபிடள்ஸ் அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய ஆவேஷ் கான், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்களில் 2ம் இடத்தில் உள்ளார்.

ரபாடா, அஷ்வின், அக்ஸர் படேல், அமித் மிஷ்ரா என டாப் பவுலர்கள் இருக்கும் டெல்லி அணியில் தனது அபாரமான பவுலிங்கால் தனித்து தெரிந்த ஆவேஷ் கான், முன்னாள் ஜாம்பவான்கள் பலரையும் கவர்ந்தார்.

14வது சீசனில் அவர் வீழ்த்திய 14 விக்கெட்டுகளில், பல இளம் பவுலர்களின் கனவு விக்கெட்டாக திகழும் தல தோனியின் விக்கெட்டும் ஒன்று. சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் தோனியை வெறும் இரண்டே பந்தில் ரன்னே அடிக்காமல் வெளியேற்றினார் ஆவேஷ் கான்.

இந்நிலையில், தோனியின் விக்கெட்டை வீழ்த்தியது குறித்து பேசியுள்ள ஆவேஷ் கான், சில ஓவர்கள் மட்டுமே மீதமிருந்தன. தோனி அடித்து ஆடுவார் என்று ரிஷப் பண்ட்டுக்கு தெரியும். ஆனால் தோனி களத்தில் இறங்கி பேட்டிங் ஆடி 4 மாதங்கள் ஆகியிருந்ததால், அவருக்கு பேட்டிங் எளிதாக இருக்காது என்பதும் தெரியும். அதனால், தோனிக்கு தைரியமாக ஷார்ட் பிட்ச் பந்து வீசுமாறு ரிஷப் கூறினார். நானும் அதேமாதிரி வீசினேன். இன்சைட் எட்ஜ் பட்டு தோனி போல்டானார் என்று ஆவேஷ் கான் தெரிவித்தார்.

ஒரு விக்கெட் கீப்பராக, பவுலர்களுக்கு ஆகச்சிறந்த அறிவுரைகளை வழங்கி பல ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுக்கு காரணமாக இருந்த தோனியையே அவுட்டாக்க ஐடியா கொடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார் ரிஷப் பண்ட்.
 

click me!