இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 2000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்ததாக தகவல் வெளிவந்தது. அதிலிருந்து 6 பேர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டனர்.
இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் நடப்பு வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் முடிவடைகிறது. இதையடுத்து ஏற்கனவே பிசிசிஐ, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்களை பெற்றது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 2000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்ததாக தகவல் வெளிவந்தது. அதிலிருந்து 6 பேர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டனர்.
டாம் மூடி, மைக் ஹெசன், ராபின் சிங், ஃபில் சிம்மன்ஸ், லால்சந்த் ராஜ்பூத் மற்றும் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. இவர்கள் 6 பேருக்கும் இன்று நேர்காணல் நடத்தப்படுகிறது.
கபில் தேவ் தலைமையிலான கெய்க்வாட் மற்றும் சாந்தா ரங்கசாமி அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக்குழு, இந்த 6 பேரையும் நேர்காணல் செய்கிறது. இன்று மாலை 7 மணிக்கு இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் அறிவிக்கப்படவுள்ளார்.
இந்த நேர்காணல் எல்லாம் சும்மா கண் துடைப்புதான். ஏனெனில் ரவி சாஸ்திரியே மீண்டும் தலைமை பயிற்சியாளராக தொடர்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதற்காக மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் நடத்தப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு கிளம்புவதற்கு முன், சாஸ்திரியே தலைமை பயிற்சியாளராக தொடர வேண்டும் என்ற தனது விருப்பத்தை கேப்டன் கோலி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.