அந்த பையன 4ம் வரிசையில் இறக்கினால் கோலி ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்கலாம்!! அகார்கர் தேர்வு செய்த உலக கோப்பைக்கான இந்திய அணி

By karthikeyan VFirst Published Mar 18, 2019, 9:51 AM IST
Highlights

உலக கோப்பை நெருங்கிய நிலையில், நான்காம் வரிசை இன்னும் இழுபறியிலேயே உள்ளது. அந்த இடத்தில் இறங்கப்போவது யார் என்பதை அறிய ரசிகர்கள் பேராவலாக உள்ளனர். 

உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டனர். எஞ்சிய 2-3 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டும்.

இந்திய அணியின் முதல் மூன்று வீரர்கள் வலுவாக உள்ளனர். ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரும் டாப் ஆர்டரில் வலு சேர்க்கின்றனர். தோனி, கேதர், ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரும் முறையே 5,6,7 ஆகிய வரிசைகளில் களமிறங்குவர். 

நான்காம் வரிசை தான் இன்னும் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக உள்ளது. ரஹானே, ரெய்னா, மனீஷ் பாண்டே என பலரை அந்த இடத்தில் இறக்கிவிட்டு பரிசோதிக்கப்பட்டது. நீண்ட தேடுதல் படலத்திற்கு பிறகு நான்காம் வரிசை வீரராக தேர்வு செய்யப்பட்ட ராயுடு, ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர், நியூசிலாந்துக்கு எதிரான தொடர் ஆகியவற்றில் நன்றாக ஆடியதை இந்திய அணி நிர்வாகம் திருப்தியடைந்தது.

ஆனால் அதற்கு ராயுடுவே ஆப்பு வைத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் படுமோசமாக சொதப்பினார். அவரது ஆட்டத்தில், அவர் தன்னம்பிக்கையுடன் இல்லாதது அப்பட்டமாக தெரிந்தது. உலக கோப்பை நெருங்கிய நிலையில், ராயுடு படுமோசமாக சொதப்பியதும் தன்னம்பிக்கையில்லாமல் ஆடியதும் இந்திய அணிக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. 

ஆஸ்திரேலிய தொடரில் முதல் மூன்று போட்டிகளில் ஆடிய ராயுடு, வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து நான்காவது போட்டியில் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். பேட்டிங் சரியாக ஆடாதது மட்டுமல்லாமல் அவரது ஃபீல்டிங்கும் சரியில்லை. ராயுடு சொதப்பியதால் இந்திய அணியின் நான்காம் இடம் இன்னும் இழுபறியிலேயே உள்ளது. 

ராயுடு சரியாக ஆடாத அதேவேளையில், தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் மிடில் ஆர்டரில் அசத்தலாக ஆடினார். சூழலுக்கு ஏற்றவகையில் ஆடினார். மிடில் ஓவர்களில் பொறுமையாக சிங்கிள் ரொடேட் செய்து ஆடும் விஜய் சங்கர், அதேநேரத்தில் பெரிய ஷாட்டுகளையும் நன்றாக ஆடுகிறார். ஃபீல்டிங் நன்றாக செய்கிறார். பவுலிங்கும் வீசுவார் என்பதால், தேவைப்பட்டால் அவரை மிடில் ஓவர்களில் சில ஓவர்களை வீசவைக்கலாம். 

அந்த வகையில் விஜய் சங்கரை நான்காம் வரிசையில் இறக்கலாம் என்று அகார்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார். நான்காம் வரிசை வீரருக்கான இழுபறி நீடித்துவரும் நிலையில், கும்ப்ளே, கங்குலி, பாண்டிங், ஹைடன் உள்ளிட்ட பல முன்னாள் ஜாம்பவான்கள் தங்களது கருத்தை தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், அகார்கர் அந்த இடத்தில் விஜய் சங்கரை களமிறக்கலாம் என தெரிவித்துள்ளார். அதேபோல உலக கோப்பை அணியில் ஆடும் லெவனில் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷமியை இறக்கலாம் என தெரிவித்துள்ளார். ஷமி தற்போது நல்ல ஃபார்மில் அருமையாக வீசிவருகிறார். அவர் புதிய பந்திலும் நன்றாக வீசுவார்; பழைய பந்திலும் நன்றாக வீசுவார்; மிடில் ஓவர்களிலும் வீசவல்லவர். இன்னிங்ஸின் எல்லா சூழலிலும் நன்றாக வீசவல்ல ஷமியை பும்ராவுடன் ஃபாஸ்ட் பவுலராக எடுக்கலாம் என அகார்கர் தெரிவித்துள்ளார். 

அகார்கர் தேர்வு செய்துள்ள உலக கோப்பை அணி:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), விஜய் சங்கர், தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, ஷமி, குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா. 
 

click me!