IPL 2022: ஐபிஎல் 15வது சீசனின் பெஸ்ட் லெவன்..! ஆகாஷ் சோப்ராவின் தரமான தேர்வு

By karthikeyan VFirst Published May 31, 2022, 3:12 PM IST
Highlights

ஐபிஎல் 15வது சீசனின் சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.
 

ஐபிஎல் 15வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. 15வது சீசனில் புதிதாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்றது. 

இந்நிலையில், இந்த சீசனின் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா. தொடக்க வீரர்களாக இந்த சீசனின் டாப் 2 ரன் ஸ்கோரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரையும் நிகில் சோப்ரா தேர்வு செய்ததில் ஆச்சரியமில்லை. பட்லர் இந்த சீசனில் 863 ரன்களை குவித்து, ஒரு சீசனில் அதிக ரன்களைகுவித்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

3ம் வரிசையில் சன்ரைசர்ஸ் அணியின் 3ம் வரிசை வீரராக இந்த சீசன் முழுக்க ஜொலித்த ராகுல் திரிபாதியையும், 4ம் வரிசையில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவையும் தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா, முதல் சீசனிலேயே கேப்டன்சியில் அனைவரையும் கவர்ந்து கோப்பையையும் வென்ற ஹர்திக் பாண்டியாவைத்தான் கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.

5 மற்றும் 6ம் வரிசைகளில் இந்த சீசனில் மிடில் ஆர்டர் மற்றும் ஃபினிஷிங்கில் சிறப்பாக செயல்பட்ட டேவிட் மில்லர் மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரசலையும் அணியில் எடுத்துள்ளார்.

யுஸ்வேந்திர சாஹல் ஒரேயொரு ஸ்பின்னரை மட்டுமே எடுத்துள்ள ஆகாஷ் சோப்ரா, ஃபாஸ்ட் பவுலர்களாக ஆவேஷ் கான், ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார்.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த ஐபிஎல் 15வது சீசனின் சிறந்த லெவன்:
 
ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மில்லர், ஆண்ட்ரே ரசல், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
 

click me!