IPL 2021 அந்த டீம் கண்டிப்பா ஃபைனலுக்கு முன்னேறும்..! ஆகாஷ் சோப்ராவின் துணிச்சலான கணிப்பு

By karthikeyan VFirst Published Sep 25, 2021, 4:51 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனின் ஃபைனலுக்கு கேகேஆர் அணி முன்னேறும் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசனின் 2வது பாகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. டெல்லி கேபிடள்ஸ், சிஎஸ்கே ஆகிய 2 அணிகளும் இந்தியாவில் நடந்த முதல் பாகத்திலும் அருமையாக ஆடி வெற்றிகளை குவித்தன; அமீரகத்தில் நடந்துவரும் 2ம் பாகத்திலும் சிறப்பாக ஆடிவருகிறது.

மும்பை இந்தியன்ஸ் முதல் பாகத்திலும் பெரிதாக ஆடவில்லை. அதேபோல சராசரியாகத்தான் அமீரக பாகத்தையும் தொடங்கியுள்ளது. முதல் பாகத்தில் நன்றாக ஆடி வெற்றிகளை குவித்த ஆர்சிபி அணி, 2வது பாகத்தில் படுமோசமாக ஆடி 2 தோல்வி அடைந்துள்ளது.

ஆர்சிபி அணி முதல் பாகத்திற்கு நேர்மாறாக 2ம் பாகத்தில் சொதப்பிவரும் நிலையில், முதல் பாகத்தில் மிகக்கடுமையாக திணறிய கேகேஆர் அணி 2ம் பாகத்தில் அதிரடியாக ஆடி எதிரணிகள் மீது ஆதிக்கம் செலுத்தி தொடர்ச்சியாக 2 வெற்றிகளை பெற்றுள்ளது.

ஆர்சிபியை 92 ரன்னில் சுருட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கேகேஆர் அணி, சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் மீது முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி அபார வெற்றி பெற்றது.

ஆக்ரோஷமான பயிற்சியாளர்(மெக்கல்லம்), ஆக்ரோஷமான கேப்டனை(மோர்கன்) பெற்றுள்ள கேகேஆர் அணி, அவர்களின் ஆக்ரோஷமான அணுகுமுறையை அப்படியே களத்தில் கடத்துகிறது. அந்த அணியின் பெரிய பிரச்னையாக இருந்த ஓபனிங்கிற்கு, வெங்கடேஷ் ஐயர் சிறந்த தீர்வை வழங்கியுள்ளார். வெங்கடேஷ் ஐயர் வேற லெவலில் ஆடிவருகிறார். பேட்டிங், பவுலிங் என அனைத்துவகையிலும் மிகச்சிறப்பாக செயல்பட்டுவருகிறது கேகேஆர் அணி.

இந்நிலையில், இந்த சீசனின் முதல் பாகத்தில் படுமோசமாக சொதப்பி பிளே ஆஃபிற்கே தகுதிபெறுமா என்ற சந்தேகத்திற்குள்ளாகியிருந்த கேகேஆர் அணி, வெறும் இரண்டே போட்டியில் தங்கள் அணி மீதான மற்றவர்களின் பார்வையை மாற்றியுள்ளது.

கேகேஆர் அணி இந்த சீசனின் ஃபைனலுக்கு கண்டிப்பாக முன்னேறும் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து கூறியுள்ளார்.
 

click me!