வீட்டில் செல்வ வளம் பெருக வேண்டுமா? இந்த எளிய பரிகாரத்தை செய்தால் போதும்..

Published : Jul 22, 2023, 02:22 PM IST
வீட்டில் செல்வ வளம் பெருக வேண்டுமா? இந்த எளிய பரிகாரத்தை செய்தால் போதும்..

சுருக்கம்

வெற்றிலை கொடி ஆண் கொடியாக கருதப்படுகிறது. எனவே, இது தனியாக வளராது. வேறு ஏதேனும் செடியுடன் சேர்த்து வளர்ப்பது நல்லது

நாம் என்ன தான் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் பணம் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை என்பது நடுத்தர மக்கள் பலரின் புலம்பலாக உள்ளது. ஆனால் வீட்டில் செல்வ வளம் பெருக இந்த பொருளை வைத்து பரிகாரம் செய்தால் போதும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். அதற்கு வீட்டில் வெற்றிலை கொடியும், 5 ரூபாய் நாணயமும் இருந்தால் போதும் வெற்றிலை கொடி விஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறது. இந்த வெற்றிலை கொடி வீட்டில் இருப்பது மகாலட்சுமி இருப்பதற்கு சமம். அப்படியிருக்க வெற்றிலை கொடி எப்படி நம் செல்வத்தை பெருக்கும்? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

வெற்றிலை கொடி ஆண் கொடியாக கருதப்படுகிறது. எனவே, இது தனியாக வளராது. வேறு ஏதேனும் செடியுடன் சேர்த்து வளர்ப்பது நல்லது. இப்படி வளர்ந்த வெற்றிலையை கொடி மண்ணிலோ, தொட்டியிலோ வளர்க்கலாம். வெற்றிலை கொடியைச் சுற்றியுள்ள களைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். வெற்றிலை கொடியை மண்ணிலிருந்து அரை அடி தூரத்தில் காம்பாக விடவும்.

திருமண உறவில் இந்த 5 ராசி ஜோடிகளுக்கு மட்டும் செட்டே ஆகாதாம்.. ஏன் தெரியுமா?

இலைகள் இருந்தால் அகற்றிவிடவும். பின்னர் இந்த காம்பு பகுதியில் மஞ்சளை தடவி, மகாலட்சுமியின் குங்குமத்தை வைக்கவும். இப்படி அலங்கரித்த பிறகு, சுற்றிலும் உள்ள மண்ணை நன்கு கிளறவும். கொடியை மண்ணில் நல்ல ஆக்ஸிஜன் இருந்தால்தான் செடிகள் செழித்து வளரும். எனவே, மண் எப்போதும் தளர்வாக இருக்க வேண்டும். இப்போது 5 ரூபாய் நாணயமோ அல்லது 1 ரூபாய் நாணங்கள் ஐந்தையும் எடுத்து, வெற்றிலைக் கொடியைச் சுற்றி மண்ணில் புதைக்க வேண்டும்.

பின்னர் அதற்கு தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும். இதை தினமும் செய்து வந்தால், வீட்டில் செடி வளரும் அளவுக்கு செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த பரிகாரத்தை வளர்பிறை நாளில் மட்டுமே தொடங்க வேண்டும். மேலும் , சூரியன் இருக்கும் போது மட்டுமே இந்தப் பரிகாரத்தைச் செய்ய வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்கு பின்போ அல்லது அல்லது சூரிய உதயத்திற்கு முன்போ செய்யக்கூடாது.

வளர்பிறை நாட்களில் இந்த நாணயங்களை மாதத்திற்கு ஒரு முறை மாற்றலாம். மண்ணில் தோண்டி எடுத்த நாணயங்களை கழுவி சுத்தம் செய்து பூஜை அறையில் வைக்கவும். வெற்றிலை கொடி எதிர்மறை ஆற்றலை அகற்றி, நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கும் ஆற்றல் உண்டு. வெற்றிலை கொடிகள் இருக்கும் இடத்தில் மாந்திரீகம், சூனியம், சூனியம் வேலை செய்யாது என்றும் நம்பப்படுகிறது. 

கோவிலில் உடைக்கும் தேங்காய் அழுகினால் அது அபசகுணமா? பூ இருந்தால் என்ன பொருள்?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Sani Bhagavan: சனி பகவான் கருப்பாக இருக்க காரணம் என்ன தெரியுமா? பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்.!
May 2026 Rasi Palan: அடுத்த 10 நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிகள் மற்றும் பரிகாரங்கள்.!