நாக தோஷம் மற்றும் கேது தோஷத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் திருமுருகநாதர்: பரிகார வழிபாடு!

Published : Jan 17, 2026, 09:08 PM IST
Thirumuruganpoondi Temple for Kethu Dosham Remedy Benefits In Tamil

சுருக்கம்

ஜாதகத்தில் கேதுவினால் ஏற்பட்ட தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோயில் பற்றி இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.

பொதுவாக ஜாதகத்தில் முக்கியமான கிரகங்களான சனி மற்றும் குருவைத் தொடர்ந்து ராகு மற்றும் கேதுவும் முக்கிய கிரகங்கள் தான். ராகு மற்றும் கேது பெயர்ச்சியும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ராகு கொடுக்க நினைத்தால் அதனை கேது பகவான் தடுக்க நினைப்பார். இதே போன்று தான் கேது கொடுக்க நினைத்தால் ராகு பகவான் தடுக்க நினைப்பார். அப்படிப்பட்ட இந்த ராகு கேதுவும் ஜாதகத்தில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இதில் கேது தோஷத்தால் ஏற்பட்ட பாதிப்பு நீங்க எந்த கோயிலில் வழிபாடு செய்ய வேண்டும் என்ன வழிபாடு பண்ண வேண்டும் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நவக்கிரகங்களில் ஒன்றான கேது பகவானுக்கு தனி சன்னதியிருக்கும் கோயில்கள் ஒரு சில தான். அதிலும் முக்கியமான கோயிலாக இருப்பது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள திருமுருகநாத சுவாமி கோயில் தான். இந்தக் கோயிலில் தான் கேது பகவானுக்கு என்று தனி சன்னதி இருக்கிறது.

1008 அண்ணங்களையும் அளவில்லாத காலம் அடக்கி ஆளும் மரம் பெற்ற சூரபத்மினி தேவர்களை சிறை பிடித்து துன்புறுத்தி வந்தான் தேவர்கள் சேனாதிபதியான குமார கடவுள் தேவர்கள் துயர் நீக்க ிருலம் கொண்டார் கந்த சஷ்டி விரதம் இருந்து தாயிடம் சக்திவேல் வாங்கி சூரபத்வன் மற்றும் அவரது தம்பி யாரை சம்காரம் செய்தார் இதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவபெருமானின் அறிவுரைப்படி நொய்யால் நதிக்கரையில் அமைந்துள்ள மாதவி வனநாதரை வணங்க வந்தார் அப்போது தன் வெற்றிவேலால் தீர்த்தமொன்றை தோற்றுவித்தார் என்று பெயர் உண்டு . தண்ணீரை கொண்டு அபிஷேகம் செய்து மூலவரையும் அன்னையும் மேற்கு நோக்கியபடி பிரதிஷ்டை செய்த வணங்கினார் இதனால் கொடிய பிரம்மஹத்தி தோஷம் நீங்க பெற்றார் முருகன் இக்கோயிலின் வெளியே உள்ள வேம்பம்படி முருகன் சன்னதியின் அருகே நீங்கிய பிரம்மஹத்தி தோஷமானது ஒரு சதுரக்கலாக உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன கல்லை இன்றும் காணலாம்.

திருமுருகன்பூண்டி சென்று வழிப்பறித் திருடர்கள் இருக்கும் சொந்த ஊரில் அந்த பயத்திலிருந்து பக்தர்களை காப்பாற்றாமல் நீயும் அம்பிகையும் எதற்காக இங்கே இருக்கிறீர்கள் என்று இறைவனை திட்டி பாடல் பதிகம் பாடினார். சுந்தரமூர்த்தி நாயனரின் ஆற்றாமை கண்டு தாளமாலும் சுந்தரனின் தமிழ் பதிகத்தால் மகிழ்ந்தும் திருமுருக நாதசுவாமி அத்தனை பொருட்களையும் பூதக்களங்கள் மூலம் அவரிடமே திரும்ப சேரும்படி செய்யச் செய்தார் எனவே இழந்த பொருளை மீண்டும் பெற்றிட பரிகாரத் தளமாக திருமுருகன் பூண்டி விளங்குகிறது.

திருமுருகநாதர் திருக்கோயில் வழிபாட்டு பலன்கள்:

இழந்த பொருள் அல்லது தொலைந்து போன பொருள் திரும்ப கிடைக்க இந்த கோயிலில் வந்து வழிபாடு செய்தால் திரும்ப கிடைக்கும் என்பது ஐதீகமாக சொல்லப்படுகிறது. அதே போன்று ஜோதிட ரீதியாக ஜாதகத்தில் கேது பகவான் பாதிப்பு இருந்தால் இங்கு வந்து வழிபாடு செய்ய சிறப்பான பலன் கிடைக்கும். இந்த கோயிலானது கேது பரிகார தளமாக விளங்குகின்றது.

கோயிலில் கேது பகவானுக்கு என்று தனி சன்னதி அமைத்து பூஜைகள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கேது தோஷத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு அரிய பரிகாரத் தளமாக இந்த கோயில் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராட செய்த பாவங்கள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம். அதே போன்று பில்லி, சூனியம், ஏவல் ஆகியவை நீங்கும். திருமண பாக்கியம் கிடைக்கவும், குழந்தை பாக்கியத்திற்காகவும் பக்தர்கள் கோயிலில் வேண்டிக் கொள்கின்றனர்.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

இழந்த சொத்து, செல்வம் மற்றும் நிம்மதியை மீட்டுத் தரும் திருமுருகநாத சுவாமி! திருமுருகன்பூண்டி தலத்தின் அதிசயம்!
ஒரே இடத்தில் மூன்று சிவ வடிவங்கள்! பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதர் - சீர்காழியின் ஆன்மீக ரகசியங்கள்!