ஒரே இடத்தில் மூன்று சிவ வடிவங்கள்! பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதர் - சீர்காழியின் ஆன்மீக ரகசியங்கள்!

Published : Jan 17, 2026, 07:52 PM IST
Sirkali Sattainathar Temple History three Forms of Lord Shiva in Tamil

சுருக்கம்

Sirkali Sattainathar Temple History : பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர் மற்றும் சட்டைநாதராக ஈசன் அருள்பாலிக்கும் சட்டைநாத சுவாமி கோயிலின் சிறப்புகள் மற்றும் வழிபாட்டு பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம். 

சீர்காழியில் சட்டைநாத சுவாமி கோயில் சிவபெருமான் மூன்று வடிவங்களில் அருள் பாலிப்பார் அவர் மேல் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அருள்பாலிக்கின்றனர். நடுத்தளத்தில் தோணியப்பர் அருள் பாலிக்கிறார் மற்றும் அடித்தளத்தில் சட்டை நாத சுவாமி அருள் பாலிக்கின்றார். இந்த கோயிலில் மற்றொரு வரலாற்றுசிறப்பு ஒன்று உள்ளது அது யாரென்றால் நம் திருஞானஞானசம்பர் . இந்தக் கோயிலின் அந்த சிவனிடமே ஞானப்பால் பெற்ற கதை இந்த கோயிலுக்கு சிறப்பாக விளங்குகிறது. வரலாற்று கதையை பார்க்கலாம்.

ஞானப்பால் பெற்ற சம்பந்தர் வரலாறு: 

சீர்காழியில் வசித்துவந்த சிவபாதஇருதயர் புனிதவதி தம்பதியரின் பிள்ளை சம்பந்தன். சம்பந்தருக்கு மூன்று வயதாக இருக்கும்போது, தன் தந்தையுடன் தோணியப்பர் கோவிலுக்குப் போனார். சம்பந்தரை பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் உட்கார வைத்துவிட்டு, சிவபாதஇருதயர் குளத்தில் குளிக்கச் சென்றார். சிறிது நேரம் கழிந்தது. குழந்தைக்குப் பசியெடுத்தது. குளிக்கப் போன தந்தையையும் காணவில்லை. குழந்தை சம்பந்தன் அழவே, இதைக் கண்ட தோணியப்பர், அன்னையுடன் ரிஷப வாகனத்தில் குழந்தை அருகே வந்தார். அன்னை பொற்கிண்ணத்தில் பாலை எடுத்து குழந்தைக்கு ஞானப்பால் ஊட்டினார். குழந்தை அழுகையை நிறுத்தவே, இருவரும் மறைந்தனர்.நீராடி வந்த சிவபாதஇருதயர், குழந்தை சம்பந்தன் கையில் பொற்கிண்ணம் இருப்பதையும், குழந்தையின் கடைவாயில் பால் ஒழுகுவதையும் கண்டு துணுக்குற்றார்.

“யாரிடம் பாலை வாங்கிக் குடித்தாய்?” என்று கோபத்துடன் கிண்ணத்தைப் பிடுங்கி வீசி எறிந்தார். அங்கிருந்த ஒரு குச்சியை எடுத்து மிரட்டினார்.மூன்று வயது நிரம்பிய குழந்தை இத்தனை இலக்கண சுத்தமாக எப்படி திடீரென்று பாட முடியும்? சிவபாதஇருதயர் நடந்ததை விளங்கிக் கொண்டார். அவருக்கும் அங்கு கூடியிருந்த அனைவருக்கும் இது சிவபெருமானின் கருணை என்பது விளங்கியது. அன்றுமுதல் குழந்தை சம்பந்தன் திருஞானசம்பந்தர் என்று அழைக்கப்படலானார்.

சிவபாத இருதயர் சம்பந்தன் கையில் இருந்த பொற்கிண்ணத்தை வீசியபோது, அது அங்கிருந்த சுவரில் பட்டு விழுந்தது. கிண்ணம் விழுந்த சுவடை இப்போதும்கூட பார்க்கலாம் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. திருஞானசம்பந்தர் பிறந்து, பயின்ற வீடு இப்போதும் திருஞானசம்பந்தர் தெருவில் உள்ளது. தேவாரப் பாடசாலையாக இந்த இல்லம் இயங்குகிறது. இப்போதும் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவாதிரை தினத்தன்று ஞானப்பால் வழங்கிய நிகழ்வு திருமுலைப்பால் விழாவாக 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

மூன்று வடிவத்தில் அருள்பாலிக்கும் சிவ பெருமான்: 

இக்கோவில் மூன்று அடுக்குகளைக்கொண்ட குன்றுக்கோவிலாக விளங்குகிறது. கீழ் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அருள்பாலிக்கின்றனர். இது லிங்க மூர்த்தம் எனப்படும். இவருக்கு 6 கால பூஜை நடக்கிறது. படைக்கும் தொழிலைச்செய்த பிரம்மா, தானே உலகில் பெரியவன் என அகங்காரம் கொண்டார். இந்த அகங்காரத்தைப் போக்குவதற்காக சிவபெருமான், பிரணவ மந்திரத்தை பிரம்மனுக்கு மறக்க செய்தார். இதனால் வருந்திய பிரம்மன் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். . இதனால் இத்தலத்திற்கு இறைவன் பிரம்மபுரீஸ்வரர் வடிவத்தில் அருள் பாலிக்கின்றார்.

நடுத்தளம்: 

நடு அடுக்கில், உமாமகேஸ்வரர் உள்ளனர். இவரை தோணியப்பர் என அழைக்கிறார்கள். இவருக்கு 4 கால பூஜை நடக்கிறது. இந்தக் குன்றையும் 'தோணிமலை' என்கின்றனர். தோணியப்பர் மற்றும் அன்னையரும்தான் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய சிறப்பு இவருக்கே உரியதாக கூறப்படுகிறது. ஞானப்பால் ஊட்டி அவரின் குழந்தையிலேயே பதிகம் பாட வைத்ததாக கூறப்படுகிறது குழந்தையிலேயே பதிகம் பாடிய ஞானசம்பந்தர் வரலாற்றுச் சிறப்பில் மிகவும் சிறப்பை பெற்று வருகிறார். திருஞான சம்பந்தருக்கு ஞானபால் கொடுத்த சிறப்பு தோணியப்பரையே சாரும்.

அடித்தளம்: மூன்றாவது தளத்தில் சட்டநாதராக இறைவன் அருள்கிறார்.வாமன அவதாரம் எடுத்த ஸ்ரீமந் நாராயணன் மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்கிறார். மன்னனும் மூன்றடி மண்ணை எடுத்துக் கொள்ளும்படி சொல்ல, மகாவிஷ்ணு விஸ்வரூபம் எடுத்து பூமியையும் வானத்தையும் இரண்டு அடிகளால் அளந்தார். மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து அளக்க, மன்னன் பூமியில் புதைந்து மறைகிறார்.இதனால் மகாவிஷ்ணுவுக்கு, தான் எவ்வளவு பெரிய காரியம் செய்திருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. தேவர்களிடம் ஆக்ரோஷமாக நடந்துகொள்கிறார். தேவர்கள் அச்சமடைந்து ஈசனிடம் முறையிடுகிறார்கள். 

சிவபெருமான் வடுகநாதராக வந்து, மகாவிஷ்ணுவின் மார்பில் அடித்து வீழ்த்தினார்.திருமகள் தன் கணவனைக் காப்பாற்றும்படி சிவனை வேண்டினார். அதனால் மகாவிஷ்ணுவின் அகந்தை என்னும் மாயையை நீக்கி அருளினார் ஈசன். ஸ்ரீமந்நாராயணனும் தன் தவறை உணர்ந்து, தன் எலும்புக்கும் தோலுக்கும் மகிமை அளிக்கும்படி ஈசனை பிரார்த்திக்கிறார். அதனை ஏற்று ஈசன் அவரின் எலும்பை தண்டாயுதமாகவும், தோலைச் சட்டையாகவும் அணிந்து சட்டைநாதராக அருள்கிறார். பேச்சு வழக்கில் காலப்போக்கில் அது சட்டநாதராக மாறிவிட்டது.

சட்டநாதர் கோயிலின் பலன்கள்: 

இந்த கோயில் தருமபுர ஆதீனத்தின் கீழ் உள்ளது இந்த கோயிலுக்கு சென்று வந்தால் குழந்தைகள் புத்திசாலியாகவும் கல்வியில் சிறந்து விளங்குவதாகவும் கூறப்படுகிறது. ஞானசம்பந்தர் குழந்தையிலேயே சிறந்த அறிவுப் பட்டவராக விளங்கினார் அதனால் நம் குழந்தைகளையும் அங்கு சென்று அங்கு உள்ள ஞானப் பால் கொடுத்து வந்தால் கல்வியில் சிறந்து விளங்குவராகவும் கூறப்படுகிறது. சட்டைநாதரைத் தரிசிக்கச் செல்லும் ஆண்கள் மேல் சட்டை அணியாமலும், பெண்கள் கூந்தலில் மலர் சூடாமலும் செல்லும் பழக்கம் இப்போதும் பின்பற்றப்படுகிறது. சட்டைநாதரை வழிபட வழக்குகளில் வெற்றி கிடைக்கும், எதிரிகளின் தொல்லை நீங்கும் என்பது ஐதீகம்.

எட்டு பைரவர் இருக்கும் இடம்:

சட்டநாத திருக்கோயிலில் பைரவர்கள் 8 அவதாரங்களில் இங்கு உள்ளதாக கூறப்படுகிறது எங்கும் காணாத எங்கும் காணாத எட்டு பைரவர்கள் இந்த கோயிலில் அருள் பாலிப்பதாக அறியப்படுகிறது அசிதாங்க பைரவர், குருபைரவர், சண்டபைரவர், குரோதனபைரவர், உன்மத்த பைரவர், கபாலி பைரவர், பீஷண பைரவர், சம்கார பைரவர் என எட்டு பைரவர்கள் இங்கு அருள் பாலிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

முருகப்பெருமானே சிவலிங்கத்தை நிறுவி வழிபட்ட தலம்! திருப்பூர் திருமுருகநாத சுவாமி கோயிலின் பிரமிக்க வைக்கும் வரலாறு!
மதுரை மீனாட்சியம்மனுக்கு தங்க கவசம், வைர கிரீடம் அணிவிக்கும் சிறப்பு வைபவம்