
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
இதையடுத்து ஒ.பி.எஸ் அணி, சசிகலா அணி, தீபா அணி, திமுக சார்பில் ஸ்டாலின் அணி என தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒ.பி.எஸ் அணியில் தீபாவுடன் கைகோர்த்து செயல்படுவதா இல்லை தனித்து போட்டியிடுவதா என ஆலோசித்து வருகின்றனர். சசிகலா தரப்பில் அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நிச்சயமாக ஆர்.கே.நகர் தொகுதியில் தனித்து போட்டியிடுவேன் என ஏற்கனவே அறிவித்திருந்தார். அதனால் அவர் ஒ.பி.எஸ்சுடன் கைகோர்ப்பார் என்பது சந்தேகமே.
அப்போது அவர் பேசியதாவது:
ஆர்.கே.நகர் தொகுதியில் கட்சி யாரை தீர்மானிக்கிறதோ அவர்கள் தேர்தலில் நிற்பார்கள்.
நாங்கள் அனைவரும் கட்சிக்காக பணியாற்றி ஒற்றுமையுடன் செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெறுவோம்.
ஒ.பி.எஸ் என்ற ஒரு அணியே கிடையாது. மீடியாக்கள் தான் அவரை பெரிது படுத்துகின்றனர்.
ஒ.பி.எஸ் திமுக நூலில் ஆடும் ஒரு பொம்மை, அவ்வளவுதான்.
எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அதிமுக ஜெயலலிதாவால் சிறப்பாக செயல்பட்டது. தற்போது இன்னும் சிறப்பாக செயல்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.