இந்திய இளைஞர்களை கவர்ந்த பண்பாளர் நீங்கள்.. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கெத்தா வழ்த்து கூறிய ஆளுநர் R.N.ரவி.

By Ezhilarasan BabuFirst Published Oct 25, 2021, 1:34 PM IST
Highlights

அன்பிற்கினிய திரு. ரஜினிகாந்த் அவர்களே, இந்திய திரைத் துறையில் தங்களின் அளப்பரிய பங்களிப்பிற்காக இந்திய திரைப்பட உலகில் மிக உயரிய விருதான மற்றும் வெகு சிலருக்கே கிடைக்கப்பெற்ற அங்கீகாரமாக தாதா சாகேப் பால்கே விருது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதற்காக இந்திய மக்களின் சார்பாகவும் என் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்திய திரை  உலகிற்கான தங்களின் வியத்தகு பங்களிப்புடன் பொது வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்விலும், தங்களின் தலைசிறந்த பண்பினால் இளைஞர்களை கவர்ந்து இழுத்த பண்பாளர் நீங்கள் என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வாழ்த்தியுள்ளார்.

62வது தேசிய திரைப்பட விருதுகள் 2019ஆம் ஆண்டு வெளியான மற்றும் அந்த ஆண்டில் தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு இன்று வழங்கப்பட்டு வருகிறது.துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு விருதுகளை வழங்கி வருகிறார்.இதில், 45 ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வரும் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் லதா மங்கேஷ்கர், அமிதாப்பச்சன், சத்யஜித்ரே, ஷியாம் பெனகல், நடிகர் சிவாஜிகணேசன், இயக்குனர் கே.பாலசந்தர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த விருது நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று வழங்கப்பட்டது. 

இதையும் படியுங்கள் சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்தியவர் ஓபிஎஸ்தான்.. ஒருங்கிணைப்பாளரை ஓங்கி அடித்த ஜெயக்குமார்.

இந்நிலையில் அவருக்கு ஏராளமானோர் வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த வரிசையில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு,அன்பிற்கினிய திரு. ரஜினிகாந்த் அவர்களே, இந்திய திரைத் துறையில் தங்களின் அளப்பரிய பங்களிப்பிற்காக இந்திய திரைப்பட உலகில் மிக உயரிய விருதான மற்றும் வெகு சிலருக்கே கிடைக்கப்பெற்ற அங்கீகாரமாக தாதா சாகேப் பால்கே விருது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதற்காக இந்திய மக்களின் சார்பாகவும் என் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நாள் திரைப்படங்களை விரும்பும் அனைவருக்கும்மகிழ்ச்சிஅளிக்கக்கூடியஒருபொன்னாள்ஆகும். 

இதையும் படியுங்கள்: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 4 மணி நேரத்திற்கும் மேலாக கிடுக்குப் பிடி விசாரணை.. அதிர்ச்சியில் அதிமுக.

இந்திய திரை உலகிற்கான தங்களின் வியத்தகு பங்களிப்புடன் பொது வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்விலும், தங்களின் தலைசிறந்த பண்பினால் நம் நாட்டு இளைஞர்களை கவர்ந்து இழுத்த பண்பாளர் நீங்கள். நீங்கள் நல்ல உடல்நலத்தோடு, ஆண்டுகள் பல நீடூடி வாழ இறைவனை வேண்டுகிறேன்.என அதில் கூறப்பட்டுள்ளது.

 

click me!