"பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி சுட்டுக் கொலை - உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு" 

Asianet News Tamil  
Published : Mar 20, 2017, 08:24 AM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
"பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி சுட்டுக் கொலை - உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு" 

சுருக்கம்

Yogi Adityanath yesterday sworn in as the Chief Minister of Uttar Pradesh

உத்தரப்பிரதேச முதல் அமைச்சராக யோகி ஆதித்யாநாத் நேற்று பதவியேற்ற நிலையில் இன்று பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் பிரசாரம் தொடங்கி தற்போது வரை பா.ஜ.க.வை தொடர்ந்து விமர்சித்து வருபவர் பகுஜன் சமாஜ்  கட்சித் தலைவர் மாயாவதி. ஆர்.எஸ்.எஸ். கொள்கையை செயல்படுத்தவே எம்.எல்.ஏ.வே.இல்லாத யோகி ஆதித்யநாத்தை அக்கட்சி முதல் அமைச்சராக நியமித்திருப்பதாகவும் கடுமையாகச் சாடி வருகிறார்.

இந்தநிலையில் மாயாவதி கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி முகமது சமி என்பவர் இன்று காலை மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பா.ஜ.க. மீதான மாயாவதியின் விமர்சனமும், அதனைத் தொடர்ந்து அக்கட்சி நிர்வாகி சுட்டுக் கொல்லப்பட்டதும் ஒன்றுடன் ஒன்று பொருந்தி பார்க்கக் கூடியதாகவே உள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

PREV
click me!

Recommended Stories

TN Politics: 60 ஆண்டு திராவிட அரசியலை ஒரே நாளில் கரைத்து குடித்த விஜய்.. ஸ்டாலின், சீமானை சந்தித்த பின்னணி இதுதான்!
TN Politics: தவெகவுக்கு ஆதரவு கொடுக்கும் 30 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்? உஷாராகும் விசிக, இடதுசாரிகள்.. ஸ்டாலினுக்கு சிக்கல்!