இனி எடுபடாது... எம்.பி.,களுக்கு புரியவே இல்லை... திமுகவை வாரிய பாஜக அண்ணாமலை..!

By Thiraviaraj RMFirst Published Sep 30, 2021, 4:32 PM IST
Highlights

வரலாறு எப்படி எல்லாம் திரிக்கப்படுகிறது என்பதை அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். கல்வி, அறிவு மட்டுமே யாராலும் அழிக்க முடியாதது. இதற்கு முதலில் படிக்க வேண்டும். 

ஜி.எஸ்.டி என்றால் என்னவென்று தெரியாமல் தமிழக எம்.பி.,க்கள் பேசிக் கொண்டிருப்பதாகவும், தமிழகத்தில் புரிதல் இல்லாமல் அரசியல்வாதிகள் பேசிக்கொண்டிருப்பதாகவும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இந்து முன்னணி அமைப்பின் நிறுவன தலைவர் மறைந்த ராமகோபாலனின் முதலாமாண்டு நினைவு தினம் திருச்சியில் நடைபெற்றது இதில் கலது கொண்டு பேசிய அண்ணாமலை, ‘’ராம கோபாலன் இல்லை என்றால் தமிழகத்தின் நிலையை நினைத்து கூட  பார்க்க முடியாது. அவரது கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள கூடியது என்று முதலமைச்சர் ஸ்டாலினே கூறியுள்ளார். கோயில் நகைகளை உருக்குவது, வார இறுதியில் கோயில்களை மூடுவது போன்ற தி.மு.க அரசு எடுக்கும் முடிவுகளை பொதுமக்கள் கேள்வி கேட்கின்றனர். ஜி.எஸ்.டி என்றால் என்னவென்று தெரியாமல் தமிழக எம்.பி.,க்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். (விசிக எம்.பி. திருமாவளவன் பேட்டி அளித்தது) தமிழகத்தில் புரிதல் இல்லாமல் அரசியல்வாதிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

வரலாறு எப்படி எல்லாம் திரிக்கப்படுகிறது என்பதை அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். கல்வி, அறிவு மட்டுமே யாராலும் அழிக்க முடியாதது. இதற்கு முதலில் படிக்க வேண்டும். இந்திய வரலாற்றை படிக்க வேண்டும். எதிர்கட்சியாக திமுக இருந்தபோது, பொய் பிரசாரத்தை மக்கள் நம்பும்படி செய்துவிட்டார்கள். இனி அது எடுபடாது’’ என அவர் பேசினார்.

click me!