தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து துரை வைகோ வாக்கு சேகரித்து வருகிறார்.
சமூக நீதி பற்றி மணிக்கணக்காக மேடையில் முழங்கினால் மட்டும் போதுமோ? ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோவின் சொந்த மாவட்டம் தென்காசி. அருகில் உள்ள குருவிகுளம் ஒன்றியத்தில் 22 கவுன்சிலர் பதவிகளுக்கு, தலா எட்டு இடங்களில் தி.மு.க.,வும்., ம.தி.மு.க.,வும் போட்டியிடுகிறார்கள்.
மீதமுள்ள ஆறு இடங்களை காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகளுக்கு கொடுத்து விட்டார்கள். இதில், ம.தி.மு.க., போட்டியிடுகிற 8 இடங்களில், ஒரே ஒரு இடத்தில் தான் வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு சீட் தந்திருக்கிறார்கள்.
மீதமுள்ள ஏழு இடங்களிலும் வைகோ சமுதாயத்தினருக்கு தான் சீட் கொடுத்து இருக்கிறார்கள். இதனால், அந்தக் கட்சியில் இருக்கிற மற்ற சமுதாயத்தினர் மனம் குமுறிண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து துரை வைகோ வாக்கு சேகரித்து வருகிறார்.