இந்திய பசுக்களின் பாலில் தங்கம் கலந்திருக்காம்... ஆராய்ச்சி செய்து அதிர வைக்கும் பாஜக தலைவர்..!

Published : Nov 05, 2019, 05:44 PM IST
இந்திய பசுக்களின் பாலில் தங்கம் கலந்திருக்காம்... ஆராய்ச்சி செய்து அதிர வைக்கும் பாஜக தலைவர்..!

சுருக்கம்

இந்திய பசுக்களின் பாலில் தங்கம் கலக்கிறது. அதனால்தான் பாலின் நிறம் சற்று மஞ்சள் நிறத்தில் உள்ளது. இந்திய மாடுகளுக்கு ஒரு இரத்த நாளம் உள்ளது. 

இந்திய பசுவின் பால் ஏன் மஞ்சளாக உள்ளது தெரியுமா? அதில் தங்கம் இருக்கிறது என மேற்கு வங்காள மாநில பாஜக தலைவர் கூறியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கொல்கத்தாவில் இருந்து 100 கி.மீ தூரத்தில்  உள்ள பர்த்வானில் ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ’’மாட்டுப் பாலை உட்கொண்டு உயிரோடு நாம் இருக்கிறோம். எனவே, யாராவது என் தாயுடன் தவறாக நடந்து கொண்டால், அவர்கள் நடத்தப்பட வேண்டிய விதத்தில் நான் நடத்துவேன்.

இந்திய பசுக்களின் பாலில் தங்கம் கலக்கிறது. அதனால்தான் பாலின் நிறம் சற்று மஞ்சள் நிறத்தில் உள்ளது. இந்திய மாடுகளுக்கு ஒரு இரத்த நாளம் உள்ளது. அது சூரிய ஒளியின் உதவியுடன் தங்கத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. வெளிநாட்டிலிருந்து நாம் கொண்டு வரும் பசுக்களின் இனங்கள் மாடுகள் அல்ல. அவை மிருகங்கள். அவர்கள் எங்கள் கோமாதா அல்ல. ஆனால் எங்கள் அத்தைகள். இதுபோன்ற அத்தைகளை நாம் வணங்கினால் அது நாட்டுக்கு நல்லதல்ல.

சில புத்திஜீவிகள் சாலைகளில் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். நான் அவர்களை நாய் இறைச்சியையும் சாப்பிடச் சொல்கிறேன். அவர்களின் ஆரோக்கியம் அவர்கள் எந்த விலங்கை சாப்பிடுகிறதோ அதைக் கொண்டிருக்கும். ஆனால், ஏன் சாலைகளில் சாப்பிடுகிறீர்கள்? உங்கள் வீட்டில் சாப்பிடுங்கள்’’என தெரிவித்தார். 

திலீப் கோஷ் முதல் முறையாக இது போன்ற சர்ச்சை கருத்துக்களை வெளியிடவில்லை. அடிக்கடி இதுபோல் வினோதமான கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையில் மாட்டிக் கொள்வது வழக்கம். 

PREV
click me!

Recommended Stories

Poes Garden: 'அம்மா' வீட்டுக்கு வர்றாரா தளபதி? ஜெயலலிதா பங்களாவில் விஜய்... பரபரக்கும் சென்னை!
TVK Government : இவருக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி கவிழுமாம்! யார் தெரியுமா?