ரஜினியை பார்த்து பயமே இல்லைங்றேன்! என்னை யாரும் புகழ்ந்து பேசாதீய!: யார், யாரிடம் சொன்னது?

 
Published : Jan 11, 2018, 10:29 PM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
ரஜினியை பார்த்து பயமே இல்லைங்றேன்! என்னை யாரும் புகழ்ந்து பேசாதீய!: யார், யாரிடம் சொன்னது?

சுருக்கம்

who speak about who

நாம என்ன சொல்றோம் அப்படிங்கிறதை விட, அடுத்தவன் என்ன சொன்னான்? அப்படிங்கிறதை கவனிக்குறதுலதான் நமக்கு ஆர்வம் அதிகம். 

அதிலும் அரசியல்வாதிகள் யார், யாரைப் பார்த்து, என்னென்ன சொன்னாங்க? அப்படின்னு தெரிஞ்சுக்குற அலாதியே தனி. 

அதை டீல் பண்றதுதான் இந்த பகுதியோட நோக்கமே!...

* முதல்வருக்கு நான் கடிதம் கொடுத்தேனா இல்லையா என்பதை ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. 

- மதுசூதனன்.

* லோக்சபா தேர்தலின் போது யாருக்கு ஆதரவு என்பதை அறிவிப்பதாக கூறும் ரஜினியின் வரவை பார்த்து பயப்படவில்லை. அவரது ஆன்மிக அரசியலை பா.ஜ.க. வரவேற்கிறது.

- ஹெச்.ராஜா

* மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் குறித்த தகவல்களை கேள்விப்படும்போது மிகப்பெரிய வேதனையடைகிறேன். இதை தடுப்பதற்குரிய அவசியம் இப்போது வந்திருக்கிறது. 

- வெங்கய்யா நாயுடு. 

* எம்.ஜி.ஆர். தனது வாரிசாக யாரையும் சொல்லவில்லை. அதேபோல் ஜெயலலிதாவும் யாரையும் தனது வாரிசு என குறிப்பிடவில்லை.

- பொள்ளாச்சி ஜெயராமன். 

* புயலில் காணாமல் போன மீனவர்களை நாங்கள் தேடுகிறோம் என கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு தேவையான எரிபொருள், உணவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.

- எடப்பாடி பழனிசாமி. 

* சட்டசபையில் என்னை யாரும் புகழ்ந்து பேச வேண்டாம். எல்லா புகழுமே அம்மாவுக்கே உரித்தானவை. 

- ஓ.பன்னீர் செல்வம். 

* தி.மு.க. மைனாரிட்டி அரசாக இருந்தபோது காங்கிரஸின் ஆதரவு இருந்தது. ஆனால் தற்போதைய அரசுக்கு எந்த ஆதரவும் கிடையாது. இது வீட்டிற்கு போக வேண்டிய அரசு.

- தினகரன்.

* கிரிக்கெட் காய்ச்சலில் இருந்த தேசம் இப்போதுதான் ஏனைய விளையாட்டுக்கள் மீது கவனம் செலுத்த துவங்கியுள்ளது.

- பேட்மின்டன் வீராங்கனை சிந்து

* இந்த ஆட்சியை மக்கள் எழுச்சியால் விரட்டி அடிப்பதன் மூலம் மட்டுமே அனைத்து ஆபத்துக்களில் இருந்தும் தமிழகத்தை காப்பாற்ற முடியும். 

- ராமதாஸ்.

* ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது வெளியில் வந்து பேச அஞ்சியவர்கள் எல்லாம் இன்று துள்ளிக் குதிக்கின்றனர். 

- செம்மலை. 

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!