ஒரு வார கால ஊரடங்கில் எவை எவை..? எத்தனை மணிவரை செயல்படலாம்... தமிழக அரசு அறிவிப்பு..!

By Thiraviaraj RMFirst Published Jun 5, 2021, 10:35 AM IST
Highlights

ஜூன் 7ம் தேதி முதல் 14ம் தேதி வரையிலான ஊரடங்கு காலத்தில் இறைச்சிக் கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.  

தமிழகத்தில் 7ம் தேதி காலை 6 மணியுடன் முடியவிருந்த நிலையில் 14ம்  தேதி வரை மேலும் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 7 முதல் 14 வரையிலான ஊரடங்கு காலத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

ஜூன் 7ம் தேதி முதல் 14ம் தேதி வரையிலான ஊரடங்கு காலத்தில் இறைச்சிக் கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.  வாடகைகார்களில் 3 பயணிகள், ஆட்டோக்களில் 2 பயணிகள் மட்டுமே செயல்பட அனுமதி.  மீன்சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டுமே அனுமதிக்கப்படும்

இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்காக மட்டுமே அனுமதிக்கப்படும். அனைத்து அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். சார் பதிவாளர் அலுவலகங்களில் நாளொன்றுக்கு 50 டோக்கள் மட்டுமே வழங்கப்பட்டு பத்திரப்பதிவு. தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி. 

வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ-பதிவுடன் அனுமதி. எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், தச்சர், கணினி பழுதுநீக்குவோர் உள்ளிட்ட சுய தொழில் புரிவோருக்கு இ-பதிவுடன் அனுமதி.எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், தச்சர், கணினி பழுதுநீக்குவோர் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி. எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், தச்சர், கணினி பழுதுநீக்குவோர் இ.பதிவுடன் செயல்பட அனுமதி. எலக்ட்ரிகல் பொருட்கள் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

மிதிவண்டி, மோட்டார் சைக்கிள் பழுது நீக்கும் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.ஹார்டுவேர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி. வாகனங்களில் உதிரிபாக விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி. கல்வி புத்தகங்கள், எழுதுபொருட்கள் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி. வாகன விநியோகிப்பாளர்களின் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.வாடகை வாகனங்கள், டாக்சிகள், மற்றும் ஆட்டோக்கள் இ.பதிவுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

வாடகை டாக்சிகளில் ஓட்டுநர் தவிர 3 பேர் பயணிக்க மட்டுமே அனுமதிக்கப்படும். ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும். ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்கு பயணிக்க இ.பாஸ் தேவைஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் செல்ல இ.பாஸ் பெற்று பயணிக்க அனுமதி. கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, மதுரை மாவட்ட ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள். 8 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள், இடுபொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. ஏற்றுமதி ஆணை வைத்திருப்பின், 10% பணியாளர்களுடன் செயல்பட குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அனுமதி.நடமாடும் காய்கறி, பழ, மளிகை விற்பனை தொடரும். நடமாடும் காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் விற்பனை தொடர்ந்து செயல்படும்’’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!