வி.வி.ஐ.பி.யின் அந்த மாதிரி வீடியோ ரிலீஸுக்கு ரெடி..! தேர்தலுக்கு சில மணி நேரம் முன்பாக வெளியிடுகிறார் வெற்றிவேல்... பீதியில் ஆளுங்கட்சி..!

By Vishnu PriyaFirst Published Apr 12, 2019, 5:46 PM IST
Highlights

இருவரும் ஒத்துக் கொண்டு உறவு வைத்துக் கொண்டால் யாரும் கேட்க முடியாது. கதிர்காமு மீது எஃப்.ஐ.ஆர். போடும் அரசு, அந்த அமைச்சர் ஜெயக்குமார் மீது ஏன் போடலை?” என்றவரிடம், தேர்தலை ஒட்டி வி. வி.ஐ.பி.யின் வில்லங்க வீடியோவை வெளியிட இருக்கிறாரா? என்று கேட்டதற்கு...’பொறுங்க பொறுங்க எல்லாம் வரும்.” என்றிருக்கிறார். ஏற்கனவே சம்மர் சூடு தாங்கல, இதுல இது வேறயா  வெற்றி?! ம் நடத்துங்க.

இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பதினெட்டு சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் பிரசாரங்கள். ஆளும் மற்றும் எதிர்கூட்டணிகள் எடுத்திருக்கும் சர்வேக்கள் அவைகளுக்கு ஒரு சமயம் திகில் கிளப்புபவையாகவும், மறு சமயம் தெம்பூட்டுபவையாகவும் இருக்கின்றன. 

இந்த தேர்தலில் மூன்றாவது அணியாக இருக்கும் அ.ம.மு.க....முதல் இடத்தில் நிற்கும் அ.தி.மு.க.வை ஒரு இடத்தில் கூட ஜெயிக்க விடக்கூடாது, இந்த இடைத்தேர்தலோடு அ.தி.மு.க.வின் ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என்பதில் மிக மிக தெளிவாக இருக்கிறது. அதேவேளையில் அ.ம.மு.க. போட்டியிடும் அத்தனை தொகுதிகளிலும் அதை டெபாசிட் இழக்க வைத்து, தினகரனை தமிழக அரசியலில் இருந்தே வெளியேற்றிட துடிக்கிறது ஆளும் அணி. தங்களுக்குள் நடக்கும் போரில் எதிராளியை வீழ்த்திட அரசியல் ரீதியால, முறைகேடு ரீதியாக ஆயுதங்களை எடுப்பதை விட பாலியல் ரீதியான ஆயுதங்களைத்தான் இரண்டு தரப்புமே அதிகம் பயன்படுத்திட நினைக்கிறது. 

தேர்தலுக்கு மிக குறுகிய காலமே இருக்கும் நிலையில், எளிதாக மக்கள் மனதில் சென்றடைய வேண்டும், எளிதாக எதிராளியை டேமேஜ் செய்திட வேண்டுமென்றால் இந்த செக்ஸ் பாமை தவிர வேறு வழியில்லை! என்பது இரு தரப்புகளின் நியாயம். அந்த வகையில் சமீபத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியின் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. சார்பாக போட்டியிடும் வேட்பாளரான கதிர்காமுவின் செக்ஸ் வீடியோ ஒன்று சமீபத்தில் ரிலீஸானது. அதன் பிறகு பெண் ஒருவர் கதிர்காமு மீது செக்ஸ் புகார் கொடுக்க, வழக்கும் பதிந்துள்ளது போலீஸ். 

இது பற்றி பேசும் தேனி போலீஸ் “வீடியோவில் உள்ள பெண்ணும், புகார் கொடுத்த பெண்ணும் வேறு, வேறு. வீடியோவில் உள்ள பெண் ஒரு நர்ஸ். இவர் டீனாக இருந்தபோது நெருக்கமாகி, ரெண்டாவது திருமணமே செய்து கொண்டிருக்கிறார். இது கதிர்காமுவின் குடும்பத்துக்கு தெரிந்த விஷயம். ஆனால் புகார் கொடுத்தவர் வேறு ஒரு பெண். கால் வலிக்காக கதிர்காமுவிடம் சிகிச்சைக்கு போன போது, அவர் ஒரு ஊசி போட, மயங்கியை தன்னை கதிர்காமு கெடுத்தது தெரிந்திருக்கிறது. பிரச்னை செய்தபோது ‘இதை வீடியோ பண்ணி வெச்சிருக்கேன். அதனால அப்பப்ப வந்துட்டு போ. கால்வலியும் குணமாகிடும், நானும் நிம்மதியா இருப்பேன்.’ என்று பல முறை மிரட்டி சீரழித்தவர், கடைசியில் ‘எங்க கட்சியில (அ.ம.மு.க.வில்) தலைவருக்கு நெருங்குன கை  ஒருத்தருக்கு உன்னை பிடிச்சு போச்சு. அவரையும் கொஞ்சம் கவனிச்சுடு.’ன்னு சொல்லியிருக்கார். அந்தப் பொண்ணு மறுத்து, சண்டைபோட்டுட்டு வந்து புகார் கொடுத்துடுச்சு. 

கதிர்காமு, சொன்ன இன்னொரு நபர் தங்கதமிழ்செல்வன். அவரையும் அணுசரிக்கத்தான் இந்தப் பெண்ணிடம் சொல்லி வர்புறுத்தியிருக்கிறார். இதுதான் புகார், இதை வைத்துதான் விசாரணை போயிட்டிருக்குது.” என்கிறார்கள். இது பற்றி பேசும் அ.ம.மு.க.வினர் “தேர்தலுக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாக, கதிர்காமு மற்றும் தங்கம் இருவரையும் இந்த புகார் விசாரணைக்காக போலீஸ் மூலம் பப்ளிக்காக மடக்கி அசிங்கப்படுத்தி, அவர்களின் வெற்றியை பாதிப்பதுதான் துணைமுதல்வரின் திட்டம். 

கதிர்காமு சென்னை ஹைகோர்ட்ல வாங்குன முன் ஜாமீன் இன்னையோட முடியுது. மறுபடியும் கோர்ட்டுக்கு அழைய வெச்சு, பிரசாரத்துல கவனம் செலுத்த விடாம பண்ணுறதுதான் துணை முதல்வர் டீமின் பிளான். தங்கம் அதிகம் வாக்குகளை பிரிச்சு, ரவீந்திரநாத்தின் தோல்விக்கு காரணமாகிடுவார்-ங்கிற நிலை உருவாகி இருக்கிறதாலே அவரை முடக்கிடத்தான் வேணும்னு அவர் பெயரையும் இதுல இழுத்துவிட்டிருக்காங்க பொய்யாக. பன்னீரின் பிளானை தெளிவாக முறியடிப்போம். 

இதுக்கு இடையில் எங்க அண்ணன் வெற்றிவேல் கையில் தமிழக வி.வி.ஐ.பி.யின் செக்ஸ் வீடியோ ஒண்ணு இருக்குது. தேர்தலுக்கு சில மணி நேரங்கள் முன்பாக வெளியிடப்போறார் வெற்றிவேல். சென்சார் பண்ணினாலுமே அந்த வீடியோவோட அபத்தம் கண்ணை கூச வைக்குது. அந்த பொண்ணுட்ட அவர் பேசுற ஒலியும் இருக்குது. ஆக இந்த ஒலியும் ஒளியும் சேர்ந்து அ.தி.மு.க.வின் அரசியலை இருட்டாக்க போகுது. இதை பார்த்துட்டு மக்கள் கேவலமாக திட்டி, அக்கட்சிக்கு எதிராக ஓட்டுக்களைப் போடப்போறாங்க. வெயிட் அண்டு ஸீ தட் ச்சீ வீடியோ.” என்கிறார்கள். 

அவ்வப்போது பரபரப்பான வீடியோக்களை வெளியிட்டு அ.தி.மு.க.வின் அதிகாரத்தை அதகளம் செய்யும் வெற்றிவேல் இந்த விவகாரம் பற்றி பேசுகையில்...”இருவரும் ஒத்துக் கொண்டு உறவு வைத்துக் கொண்டால் யாரும் கேட்க முடியாது. கதிர்காமு மீது எஃப்.ஐ.ஆர். போடும் அரசு, அந்த அமைச்சர் ஜெயக்குமார் மீது ஏன் போடலை?” என்றவரிடம், தேர்தலை ஒட்டி வி. வி.ஐ.பி.யின் வில்லங்க வீடியோவை வெளியிட இருக்கிறாரா? என்று கேட்டதற்கு...’பொறுங்க பொறுங்க எல்லாம் வரும்.” என்றிருக்கிறார். ஏற்கனவே சம்மர் சூடு தாங்கல, இதுல இது வேறயா  வெற்றி?! ம் நடத்துங்க.

click me!