"ஆர்கே நகர் தேர்தலோடு ஓபிஎஸ் காணாமல் போய்விடுவார்" - டி.டி.வி.தினகரன் சவால்

Asianet News Tamil  
Published : Mar 14, 2017, 02:34 PM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
"ஆர்கே நகர்  தேர்தலோடு ஓபிஎஸ் காணாமல் போய்விடுவார்" - டி.டி.வி.தினகரன் சவால்

சுருக்கம்

ttv dinakaran pressmeet about ops

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும் என்றும் இந்த இடைத் தேர்தலோடு ஓபிஎஸ் காணாமல் போய்விடுவார் என்றும் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், அதிமுக  ஆட்சிமன்றக் குழு நாளை கூடி, ஆர்.கே.நகர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியை அகற்றுவதற்காக மு.க.ஸ்டாலின் செய்யும் அடாவடி செயல்களை பொறுக்க முடியாத தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் இருந்து வெளியேற நினைப்பதாகவும் தினகரன் கூறினார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகதான்  இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என்றும் ஓபிஎஸ் அந்த சின்னத்தில் போட்டியிட நினைத்தால் அது ஒருக்காலும் நடக்காது என கூறினார்.

மேலும் ஓபிஎஸ் இது குறித்து பகல் கனவு காணுவதாகவும் தினகரன் குறிப்பிட்டார். வேண்டுமானால் வேறு ஏதாவது மாநிலங்களுக்குச் சென்று சுயேட்சையாக  இரட்டை இலை சின்னத்தில் ஓபிஎஸ் போட்டிடட்டும் என தினகரன் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

விஜய் ஜெயித்ததற்கு காரணம் ரஜினிதான்.! முடிஞ்சா சிரிக்காம படிங்க.! கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாங்கப்பா.!
Sasikala In Admk: மீண்டும் ஆளுமையை நிரூபிக்கும் சசிகலா.! சின்னம்மா பக்கம் சாயும் அதிமுக.! வனவாசம் முடிந்தது என கொக்கரிக்கும் தொண்டர்கள்.!