சேலம் மாணவன் மர்மச்சாவுக்கு உரிய விசாரணை வேண்டும் - தட்டி கேட்கும் தமிழிசை

Asianet News Tamil  
Published : Mar 14, 2017, 01:29 PM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
சேலம் மாணவன் மர்மச்சாவுக்கு உரிய விசாரணை வேண்டும் - தட்டி கேட்கும் தமிழிசை

சுருக்கம்

student to have an inquiry in Salem Tamilisai

சேலம் மாணவன் முத்துகிருஷ்ணன், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். நேற்று மாலை அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை அறிந்த அவரது பெற்றோர், உடனடியாக டெல்லி விரைந்தனர். அவர்கள், முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்யும் அளவுக்கு கோழை அல்ல. அவனது சாவில் மர்மம் உள்ளது. இதற்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.

இதையொட்டி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முத்துகிருஷ்ணன் சாவில் மர்மம் உள்ளது. இதனை உரிய விசாரணை நடத்த வேண்டும் என அறிக்கையில் கூறியுள்ளார். மேலும், அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, மாணவன் முத்து கிருஷ்ணன் மர்மச்சாவு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விஜய் ஜெயித்ததற்கு காரணம் ரஜினிதான்.! முடிஞ்சா சிரிக்காம படிங்க.! கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாங்கப்பா.!
Sasikala In Admk: மீண்டும் ஆளுமையை நிரூபிக்கும் சசிகலா.! சின்னம்மா பக்கம் சாயும் அதிமுக.! வனவாசம் முடிந்தது என கொக்கரிக்கும் தொண்டர்கள்.!