டிடிவி தினகரன் வீட்டில் விஷேசம்..! களைகட்டும் தஞ்சை..! தயாராகும் திருவண்ணாமலை..!

By Selva KathirFirst Published Apr 16, 2021, 10:27 AM IST
Highlights

டிடிவி தினகரன் மகள் ஜெயஹரினுக்கும் தஞ்சை துளசி அய்யா வாண்டையாரின் பேரனும் கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகனுமான ராமநாதனுக்கும் கடந்த ஆண்டுபுதுச்சேரியில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை அடுத்து பிப்ரவரி மாதம் சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆன பிறகு இருவருக்கும் திருமணம் நடத்தி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

கடந்த பிப்ரவரில் நடைபெறுவதாக இருந்து பிறகு தள்ளி வைக்கப்பட்ட மகள் திருமணத்திற்கான ஏற்பாட்டில் டிடிவி தினகரன் தீவிரம் காட்டி வருகிறார்.

டிடிவி தினகரன் மகள் ஜெயஹரினுக்கும் தஞ்சை துளசி அய்யா வாண்டையாரின் பேரனும் கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகனுமான ராமநாதனுக்கும் கடந்த ஆண்டுபுதுச்சேரியில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை அடுத்து பிப்ரவரி மாதம் சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆன பிறகு இருவருக்கும்திருமணம் நடத்தி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் சசிகலா சிறையில் இருந்து வெளியே வரும் போது கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தினால் திட்டமிட்டபடி திருமணத்தை நடத்த முடியவில்லை. அதன் பிறகு சட்டப்பேரவை தேர்தல் பணிகள் துவங்கியதால் டிடிவி தினகரன் தரப்பு திருமணத்தை தள்ளிப்போடுமாறு கேட்டுக் கொண்டனர்.

இதனை கிருஷ்ணசாமி வாண்டையார் ஏற்றுக் கொண்டதை அடுத்து ஜெயஹரினி – ராமநாதன் திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் முடிந்துள்ள நிலையில் திருமணத்திற்கு டிடிவி தினகரன் நாள் குறித்துவிட்டதாக சொல்கிறார்கள். அதன்படி வரும் ஜூன் மாத 20ந் தேதி தினகரன் மகளுக்கும் கிருஷ்ணசாமி வாண்டையாளர் மகனுக்கும் திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்தை திருவண்ணாமலை கோவிலில் நடத்துவது என்று தினகரன் முடிவு எடுத்துள்ளார். இதனை அடுத்து தனது மனைவி அனுராதாவுடன் திருவண்ணாமலை கோவில் சென்ற டிடிவி தினகரன் அங்கு திருமணம் நடைபெறும் மண்டபத்தை பார்வையிட்டு திரும்பியுள்ளார்.

திருமணம் திருவண்ணாமலையில் நடைபெற்றாலும் தஞ்சையில் உறவினர்களுக்காக பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தற்போது முதலே தஞ்சை களை கட்டத் தொடங்கியுள்ளது. டிடிவி தினகரன் மகளை கரம் பிடிக்கும் ராமநாதனின் தந்தை கிருஷ்ணசாமி வாண்டையார் மற்றும் துளசி அய்யா வாண்டையார் தஞ்சை மாவட்டம் முழுவதும் பிரபலமானவர்கள். அவர்கள் வீட்டு திருமணம் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் தற்போது முதலே மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதே போல் சென்னையில் அரசியல் பிரபலங்களுக்காக டிடிவி தினகரன் தனியாக ஒரு வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய உள்ளதாக கூறுகிறார்கள்.

மேலும் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள சசிகலா அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கியுள்ளார். ஆனால் டிடிவி தினகரன் மகள் திருமணத்தை சசிகலா முன்னின்று நடத்தி வைக்க உள்ளதாக கூறுகிறார்கள். இதனால் இந்த திருமணம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

click me!