தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடி, மின்னல், மழை...!! வானிலை ஆய்வு மையம் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Sep 2, 2020, 4:56 PM IST
Highlights

இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், திருவண்ணாமலை, கரூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும் 

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்கள், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில்  பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், திருவண்ணாமலை, கரூர், மதுரை,  திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக  மேகமூட்டத்துடன்  காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும். 

 

 கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக  முண்டியம்பாக்கம்  (விழுப்புரம்) 15 சென்டி மீட்டர் மழையும், காமாட்சிபுரம்  (திண்டுக்கல் ) 11 சென்டி மீட்டர் மழையும், நிலக்கோட்டை  (திண்டுக்கல்) 10 சென்டி மீட்டர் மழையும், பாடாலூர்  (பெரம்பலூர்), நீடாமங்கலம்  (திருவாரூர்) தலா 8 சென்டி மீட்டர் மழையும், திருச்சுழி   (விருதுநகர்), தாளவாடி  (ஈரோடு), கொள்ளிடம்  (நாகப்பட்டினம்) தலா 7சென்டி மீட்டர் மழையும், விழுப்புரம்  (விழுப்புரம்) 6 சென்டி மீட்டர் மழையும், மானாமதுரை  (சிவகங்கை), அரவக்குறிச்சி  (கரூர்), திருச்சி விமான நிலையம் (திருச்சி), வேடசந்தூர்  (திண்டுக்கல்), மூலநூர் (திருப்பூர்), சாத்தூர்  (விருதுநகர்) தலா  5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 

அதேபோல் செப்டம்பர் 02 அன்று தென்மேற்கு  வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி  காற்று 45-55  கிலோமீட்டர்  வேகத்தில் வீசக்கூடும், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி  காற்று 40-50  கிலோமீட்டர்  வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 02.03 ஆகிய தேதிகளில் கேரளா, லட்சத்தீவு  மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி  காற்று 40-50  கிலோமீட்டர்   வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 02 முதல்  செப்டம்பர் 06 வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55  கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல்  தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 03.09.2020  இரவு 11.30  மணி வரை  கடல் உயர் 2.5 முதல் 2.9 மீட்டர் வரை எழும்பக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

 

click me!