இதுதான் தேர்தல் ஆணையத்தின் 83 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு...!!!

Asianet News Tamil  
Published : Nov 23, 2017, 03:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
இதுதான் தேர்தல் ஆணையத்தின் 83 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு...!!!

சுருக்கம்

This is the 83-page ruling of the Election Commission

இரட்டை இலை சின்னமும் கட்சியும் எடப்பாடி- ஒபிஎஸ் அணிக்கே என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து 83 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

இதில், அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 2128 என்றும் 2128 பேரில் 1877 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி - பன்னீர் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செப். 12 ஆம் தேதி நடைபெற்ற சென்னை பொதுக்குழு தீர்மானத்திற்கு 1877 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

தினகரன் தரப்புக்கு     6 எம்.பிக்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேர் உட்பட 20 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் எடப்பாடி அணிக்கு 111 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

பொதுக்குழு உட்பட அனைத்து அமைப்புகளிலும் எடப்பாடி - பன்னீர் அணிக்கே பெருன்பான்மை உள்ளது. 

மக்களவையில் எடப்பாடி அணிக்கு 34 பேரும் டிடிவி அணிக்கு 3 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மாநிலங்களைவையில் எடப்பாடி அணிக்கு 8 பேரும் டிடிவி அணிக்கு 3 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

மதுசூதனன் தலைமையிலான அணியே இரட்டை இலையை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

TVK VIJAY: மீண்டும் தொடங்கும் விஜய் ஆட்டம்.! தளபதியின் தலைமையின் கீழ் மாறும் தமிழக அரசியல்.! திமுக, அதிமுகவை உதறித்தள்ள ரெடியாகும் தோழமைகள்.?!
Next CM: முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..! அதிமுக வாக்குகளை வாரி சுருட்டும் விஜய்..! 1% வாக்கு வித்தியாசத்தில் உச்சானி கொம்பில் திமுக!