இதுதான் தேர்தல் ஆணையத்தின் 83 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு...!!!

 
Published : Nov 23, 2017, 03:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
இதுதான் தேர்தல் ஆணையத்தின் 83 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு...!!!

சுருக்கம்

This is the 83-page ruling of the Election Commission

இரட்டை இலை சின்னமும் கட்சியும் எடப்பாடி- ஒபிஎஸ் அணிக்கே என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து 83 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

இதில், அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 2128 என்றும் 2128 பேரில் 1877 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி - பன்னீர் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செப். 12 ஆம் தேதி நடைபெற்ற சென்னை பொதுக்குழு தீர்மானத்திற்கு 1877 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

தினகரன் தரப்புக்கு     6 எம்.பிக்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேர் உட்பட 20 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் எடப்பாடி அணிக்கு 111 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

பொதுக்குழு உட்பட அனைத்து அமைப்புகளிலும் எடப்பாடி - பன்னீர் அணிக்கே பெருன்பான்மை உள்ளது. 

மக்களவையில் எடப்பாடி அணிக்கு 34 பேரும் டிடிவி அணிக்கு 3 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மாநிலங்களைவையில் எடப்பாடி அணிக்கு 8 பேரும் டிடிவி அணிக்கு 3 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

மதுசூதனன் தலைமையிலான அணியே இரட்டை இலையை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!