தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வை ரத்து பண்ணுங்க... டாக்டர் ராமதாஸ் அதிரடி கோரிக்கை.!

By Asianet TamilFirst Published Apr 15, 2021, 8:40 PM IST
Highlights

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்தது. ஆனால், 12-ம் வகுப்புத் தேர்வுகளை ஒத்திவைப்பதாகவும் மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்தில் ஏற்கனவே 10ஆம் வகுப்பு தேர்வை தமிழக அரசு ரத்து செய்து அறிவித்துவிட்டது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 5-ஆம் தேதி தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. 
ஆனால், கொரோனா வைரஸ் இந்தியாவில் எக்குத்தப்பாக எ கிறிகொண்டிருக்கும் நிலையில், பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். அதில், “இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை. கொரோனா காலத்தில் மாணவர் நலன் கருதி எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை இதுவாகும்!
சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் பாமகதான் குரல் கொடுத்தது. அந்த வகையில், மத்திய அரசின் நடவடிக்கை பாமகவுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்; குறைந்தபட்சம் சிபிஎஸ்இ போன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை குறிப்பிட்ட காலத்துக்கு ஒத்திவைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்!” என்று ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
 

click me!