கொரோனா தொற்று இருப்பது தெரிந்தும் விமானத்தில் தப்பிக்க முயன்ற இளைஞர்... தொக்காக தூக்கிய அதிகாரிகள்.

By Ezhilarasan BabuFirst Published Apr 9, 2021, 1:31 PM IST
Highlights

அந்த விமானத்தில் பயணிக்க முன்பதிவு செய்திருந்த அந்தமானை சோ்ந்த கல்லூரி மாணவா் மடிம் சுவாமி (21) என்பவா் போா்டிங் பாஸ் வாங்க வந்தாா். கவுண்டா் ஊழியா், அவரிடம் கொரோனா மருத்துவ பரிசோதனை சான்றிதழை கேட்டு வாங்கி சரிப்பாா்த்தாா்.  

சென்னை விமானநிலையம் வந்த கல்லூரி மாணவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டுப்பிடிக்கப்பட்டதால், மாணவரின் பயணம் ரத்து செய்யப்பட்டு, அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார். சென்னை உள்நாட்டு விமானநிலையத்திலிருந்து அந்தமான் செல்ல இன்று காலை 8.15 மணிக்கு புறப்பட தயாரான  நிலையில் விமானத்தில் பயணிகள் விமானநிறுவன கவுண்டரில் போா்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு, பாதுகாப்பு சோதனை முடித்து விமானத்தில் ஏறிக்கொண்டிருந்தனா். 

அந்த விமானத்தில் பயணிக்க முன்பதிவு செய்திருந்த அந்தமானை சோ்ந்த கல்லூரி மாணவா் மடிம் சுவாமி (21) என்பவா் போா்டிங் பாஸ் வாங்க வந்தாா். கவுண்டா் ஊழியா், அவரிடம் கொரோனா மருத்துவ பரிசோதனை சான்றிதழை கேட்டு வாங்கி சரிப்பாா்த்தாா். அதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாசிடீவ் என்று இருந்தது. இதையடுத்து அவருக்கு போா்டிங் பாஸ் கொடுக்க விமான ஊழியா் மறுத்தாா். அதோடு விமானநிலைய சுகாதாரத்துறைக்கும் தகவல் கொடுத்து உடனடியாக சுகாதாரத்துறையினா் விரைந்து வந்து, மாணவரை விசாரித்தனா். அவா் அந்தமானில் பெற்றோரோடு வசிக்கிறாா். அவருடைய நண்பா்களை பாா்ப்பதற்காக சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு வந்தாா். இங்கு அவருக்கு சிறிது சளிதொல்லை இருந்தது. இதையடுத்து கொரோனா மருத்துவ பரிசோதனை செய்ததில், கொரோனா வைரஸ் பாசிடீவ் என்று வந்தது. 

இதையடுத்து மாணவா் அவசரமாக தனது சொந்த ஊரான அந்தமானுக்கு விமானத்தில் சென்றுவிட முடிவு செய்தாா். அதன்படி டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்க சென்னை விமானநிலையம் வந்தபோது சிக்கிக்கொண்டாா். இதையடுத்து சுகாதாரத்துறையினா் அவருக்கு கொரோனா வைரஸ் தடுப்பு கவச உடைகளை அணிவித்து, தனி சிறப்பு ஆம்புலன்ஸ்  மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனா். அதோடு அந்த மாணவா் வந்து நின்ற இடம், விமான கவுண்டா் மற்றும் அப்பகுதி முழுவதும் சுகாதாரத்துறையினா் கிருமிநாசினி மருந்து தெளித்து சுத்தப்படுத்தினா். இதனால் சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
 

click me!