பெஞ்ச் தேய்த்து, ஹாயாக சம்பளம் வாங்கிய அதிகாரிகள்.. கண்டறிந்து ஆப்பு அடித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.

By Ezhilarasan BabuFirst Published Oct 12, 2021, 9:57 AM IST
Highlights

சென்னை வடக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு, தெற்கு-1, தெற்கு-2 உள்ளிட்ட மின் பகிர்மான வட்டங்கள் தொடர்புடைய மேற்பார்வை பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவிப் பொறியாளர்கள் ஆகியோர்களிடம் இதுவரை மின்னகத்தில் பெறப்பட்ட புகார்கள் குறித்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

சரிவர பணி மேற்கொள்ளாத இரண்டு இளநிலை பொறியாளர்களை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. இது மின்சார வாரியத்தின் ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் அதிரடியாக பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சட்டம் ஒழுங்கு மின் வினியோகம் பெரும் சவாலாக இருந்து வரும் நிலையில், துறை ரீதியாக பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் சரிவர பணி மேற்கொள்ளாத புதுவண்ணாரப்பேட்டை இளநிலை பொறியாளர், துரைப்பாக்கம் உதவி மின் பொறியாளர் இருவரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் பெறப்பட்ட புகார்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் கடந்த 8-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைப்பெற்றது. 

இதையும் படியுங்கள் : 15 வயது மாணவனுடன் 41 வயது டீச்சருக்கு ஏற்பட்ட பயங்கர காதல்... அடிக்கடி உடலுறவு... கர்ப்பம், விசாரணையில் பகீர்.

இக்கூட்டத்தில் தலைமைப் பொறியாளர்கள், சென்னை வடக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு, தெற்கு-1, தெற்கு-2 உள்ளிட்ட மின் பகிர்மான வட்டங்கள் தொடர்புடைய மேற்பார்வை பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவிப் பொறியாளர்கள் ஆகியோர்களிடம் இதுவரை மின்னகத்தில் பெறப்பட்ட புகார்கள் குறித்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. 

இதையும் படியுங்கள் : எப்பா.. துரைமுருகன் மீது சீமானுக்கு இவ்வளவு பாசமா..?? திமுகவை பகிரங்கமாக எச்சரித்த நாம் தமிழர் கட்சி.

இந்த ஆய்வில் சரிவர பணி மேற்கொள்ளாத சென்னை வடக்கு, புதுவண்ணாரப்பேட்டை மின்பகிர்மான வட்டத்தை சேர்ந்த இளநிலை பொறியாளர் எம்.சண்முகம் மற்றும் சென்னை தெற்கு 2 மின்பகிர்மான வட்டத்தை சேர்ந்த உதவி மின் பொறியாளர் வி.மகேஷ்வரி ஆகிய இருவரும் தற்காலிக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்", என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!