
சசிகலா பொதுச்செயலாளர் நியமனம் குறித்து டி.டி.வி தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு பதிலை ஏற்க முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது எங்களுக்கு முதல் வெற்றி எனவும், சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவியும் செல்லாது என விரைவில் அறிவிப்பு வரும் எனவும் ஓ.பி.எஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து அதிமுகவில் பல குழப்பங்கள் நீடித்து வந்தது. இதையடுத்து சசிகலா பிடியில் இருந்த ஓ.பி.எஸ் வெளியே வந்து தீப்பொறியாய் வெடித்தார்.
இதனால் ஓ.பி.எஸ் ஆதாரவாளர்களை சசிகலாவும், சசிகலா குடும்பத்தினரை ஓ.பி.எஸ் தரப்பும் நீக்குவதாக மாறி மாறி அறிக்கை விடுத்தனர்.
ஓ.பி.எஸ் அணி ஒரு படி மேலே போய் தேர்தல் ஆணையத்தில் சசிகலா அதிமுக சட்ட விதிகளை மீறி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே அந்த தேர்வு செல்லாது எனவும், அதிமுக வரலாற்றில் தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பதவியே இல்லை எனவும் கூறி மதுசூதனன் தலைமையில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
அதில் அதிமுக விதிப்படியே சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
மேலும் இதேபோல், சசிகலா பொதுச்செயலாளர் பதவியும் செல்லாது என விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் ஓ.பி.எஸ் நம்பிக்கை தெரிவித்தார்.