புளுகு மூட்டையை அள்ளிவடும் ஓபிஎஸ்.. போட்டு தாக்கும் தங்க தமிழ்செல்வன்..!

By vinoth kumarFirst Published Jul 31, 2021, 2:42 PM IST
Highlights

நான் ராஜினாமா செய்வது குறித்து ஓபிஎஸ்க்கு எதுவும் தெரியாது. அது எனக்கு மட்டும் தெரிந்த ரகசியம். ஜெயலலிதா என்னை ராஜினாமா செய்ய சொல்லும் போது ஓபிஎஸ் சீன்லையே கிடையாது. இந்த விஷயம் குறித்து எனது மனைவிக்கு கூட தெரியாது.

ஆண்டிப்பட்டி தொகுதியில் 2002ம் ஆண்டு ஜெயலலிதா போட்டியிட விரும்பியபோது அப்போது எம்எல்ஏவாக இருந்த தங்க தமிழ்செல்வன் மறுத்துவிட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு தங்க தமிழ்செல்வன் பதிலடி கொடுத்துள்ளார். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2002-ம் ஆண்டு சிறை சென்று திரும்பிய பின்பு ஆண்டிபட்டி தொகுதியை விட்டுக்கொடுக்க தங்க தமிழ்ச்செல்வன் மறுத்து விட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் குற்றம்சாட்டினார். ஆனால், ஓபிஎஸ் குற்றச்சாட்டை தங்க தமிழ்ச்செல்வன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இதுகுறித்து பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தங்க தமிழ்செல்வன்;- நான் ராஜினாமா செய்வது குறித்து ஓபிஎஸ்க்கு எதுவும் தெரியாது. அது எனக்கு மட்டும் தெரிந்த ரகசியம். ஜெயலலிதா என்னை ராஜினாமா செய்ய சொல்லும் போது ஓபிஎஸ் சீன்லையே கிடையாது. இந்த விஷயம் குறித்து எனது மனைவிக்கு கூட தெரியாது. பத்திரிக்கையில் வந்த பிறகு தான் என்னுடைய மனைவிக்கே தெரியும். ஆனால், ஓபிஎஸ் பொய்யான புகாரை முன் வைக்கிறார்.

ஆரம்பத்தில் இருந்தே ஓ.பன்னீர்செல்வம் டிடிவி. தினகரன் ஆதரவாளர் தான். சட்டமன்ற தேர்தல் நேரத்தில் கூட எந்தவொரு பிரச்சாரத்திலும் ஓபிஎஸ் சசிகலா குறித்து விமர்சிக்கவில்லை. டிடிவி தினகரனுடன் கூட்டு சேர்ந்துதான் என்னை தோற்கடித்தனர். அதிமுகவை வழிநடத்த தெரியாமல் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தத்தளித்து வருகின்றனர். நான் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக ஓபிஎஸ் கூறுவதற்கு தகுதி இல்லை. சசிகலா, தனிப்பட்ட குடும்பம் இன்றைக்கு அதிமுகவை கைப்பற்ற முடியாது என்று  ஓபிஎஸ் கூறி வருகிறார். ஆனால் விரைவில் சசிகலா அதிமுகவை கைப்பற்றுவார் என்று தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

click me!