196 நிமிடங்கள்..! அனல் பறக்கும் திட்டங்களுடன் அதிரடி காட்டிய அதிமுக..! அதிர்ந்து போன திமுக..!

By Manikandan S R SFirst Published Feb 14, 2020, 1:31 PM IST
Highlights

காலை 10 மணிக்கு பட்ஜெட்டை வாசிக்க தொடங்கிய துணை முதல்வர் பன்னீர் செல்வம் இடைவிடாமல் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் வாசித்து பட்ஜெட் உரையை நிறைவு செய்துள்ளார்.

2020ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி ஆளுநர் பன்வரிலால் ப்ரோஹித் உரையுடன் தொடங்கியது.  பின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துடன் 9ம் தேதி கூட்டம் நிறைவு பெற்றது. இந்தநிலையில் 2020-2021 ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி துணை முதல்வரும் நிதியமைச்சருமான பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அடுத்த ஆண்டு தமிழக சட்டசபைக்கு தேர்தல் வரவிருக்கும் நிலையில் இந்த ஆட்சியில் அதிமுக அரசு தாக்கல் செய்திருக்கும் கடைசி முழுநேர பட்ஜெட் இதுவாகும். அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். இதனால் பல்வேறு அதிரடி திட்டங்களை அதிமுக அரசு தனது பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. மக்களை கவரும் வகையிலான திட்டங்களும் இடம்பெற்றுள்ளது. காலை 10 மணிக்கு பட்ஜெட்டை வாசிக்க தொடங்கிய துணை முதல்வர் பன்னீர் செல்வம் இடைவிடாமல் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் வாசித்து பட்ஜெட் உரையை நிறைவு செய்துள்ளார்.

நிதியமைச்சர் பட்ஜெட் உரையை முடித்த பிறகு சட்டசபை கூட்டத்தொடரை 17 ம் தேதிக்கு ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். தொடர்ந்து சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். அதில் பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது தீர்மானிக்கப்படும். அதன்பின் வரும் நாட்களில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற இருக்கிறது.

அதிரடி திட்டங்களுடன் அதிமுக பட்ஜெட்..! கதிகலங்கும் திமுக..!

click me!