
விவசாயிகளை சந்திக்காமல், பிரதமர் மோடி ஏன் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார் என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை பி்ரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசியிருப்பது பெரும் விவாதப் பொருளாகாவே மாறியுள்ளது. திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் இதே கேள்வி முன்வைக்கப்பட்டது. ஆனால் அவரோ தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி கழுவுற மீனில் நழுவுற மீனாக கிரேட் எஸ்கேப் ஆகிவிட்டார்.
ஆனால் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசையின் ரியாக்சனோ, செம ஹாட்.... கோவை சுற்றுப் பயணத்தை முடித்து விட்டு திருப்பூர் திரும்பியவரை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது மோடி - ஓ.பி.எஸ். சந்திப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், "யாரை எப்போது சந்திக்க வேண்டும் என்பது பிரதமருக்குத் தெரியும். யாரையும் பிரித்து அடிமையாக நடத்த வேண்டிய அவசியம் பா.ஜ.க.வுக்கு இல்லை. முன்பு குளத்தை ஆக்கரமித்த திமுக அதனை தற்போது தூர்வாரி வருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்து பா.ஜ.க. இதுவரை யாரிடம் பேசவில்லை