ராகுல் பொதுக்கூட்டத்திற்கு 10ஆயிரம் பேரை திரட்ட தமிழக காங்கிரஸ் தீவிரம்.. நாளை குலுங்கப் போகிறது சென்னை..

By Ezhilarasan BabuFirst Published Mar 27, 2021, 12:36 PM IST
Highlights

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி சென்னை வேளச்சேரியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார் அடையாறு சாஸ்திரி நகரில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி சென்னை வேளச்சேரியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார் அடையாறு சாஸ்திரி நகரில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை (28ஆம் தேதி) சென்னை வருகை தர உள்ளார். ஏற்கடவே இதற்கான அறிவிப்பை அக்காட்சி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. நாட்டின் பிரதான இரண்டு தேசிய கட்சிகளான காங்கிரஸ்- பாஜக ஆகிய இரு கட்சிகளும் திராவிடக் கட்சிகளான அதிமுக-திமுக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர் கொள்கின்றன. அந்தவகையில் பாஜக அதிமுகவுடனும், காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. திமுக கூட்டணியில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் 20 சட்டமன்ற தொகுதிகளை காங்கிரஸ் போராடி பெற்றுள்ளது. தற்போது 20 இடங்களுக்கான வேட்பாளர்களையும் அக்கட்சி அறிவித்து ஊர் ஊராக, வீதி வீதியாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து குறிப்பாக தென் மாவட்டங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அது காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் தமிழக மக்கள் மத்தியில் காங்கிரஸ் மீது நல்லெண்ணத்தையும், ஈர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள, ராகுல் காந்தி நாளை சென்னை வர உள்ளார். காலை 11 மணிக்கு விமான நிலையம் வந்து இறங்கும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின்னர் கார் மூலமாக அவர் வேளச்சேரி  வருகிறார். அங்கு காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மௌலானாவிற்காக அடையாறு சாஸ்திரி நகரில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதில் திமுக சார்பில் சைதாப்பேட்டை திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் கலந்து கொள்கிறார். மொத்தத்தில் ராகுல் பிரச்சாரக் கூட்டத்தில் 10,000  பெரை திரட்ட தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பின்னர் பிரச்சார பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கும் அவர், நாளை மாலை சேலத்தில் நடைபெறும் திமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஹெலிகாப்டர் மூலம் சேலம் புறப்படும் உள்ளார்.  

 

click me!