வழக்காடு மொழியாக தமிழ்.. சென்னையில் உச்சநீதிமன்ற நிரந்தர கிளை.. மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..

Published : May 12, 2022, 03:34 PM ISTUpdated : May 12, 2022, 05:56 PM IST
வழக்காடு மொழியாக தமிழ்.. சென்னையில் உச்சநீதிமன்ற நிரந்தர கிளை..  மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..

சுருக்கம்

நீதிபதிகள்‌ நியமனம்‌, உச்ச நீதிமன்றக்‌ கிளைகள்‌ அமைத்தல்‌, தமிழை வழக்காடு மொழியாக அறிவித்தல்‌ ஆகிய கோரிக்கைகள்‌ தொடர்பாக முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌, பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்றத்‌ தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் புதுதில்லி, சென்னை, கொல்கத்தா மற்றும்‌ மும்பை ஆகிய இடங்களில்‌ உச்ச நீதிமன்றத்தின்‌ நிரந்தரக்‌ கிளைகளை அமைப்பதற்குத்‌ தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.  

நீதிபதிகள்‌ நியமனம்‌, உச்ச நீதிமன்றக்‌ கிளைகள்‌ அமைத்தல்‌, தமிழை வழக்காடு மொழியாக அறிவித்தல்‌ ஆகிய கோரிக்கைகள்‌ தொடர்பாக முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌, பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்றத்‌ தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் புதுதில்லி, சென்னை, கொல்கத்தா மற்றும்‌ மும்பை ஆகிய இடங்களில்‌ உச்ச நீதிமன்றத்தின்‌ நிரந்தரக்‌ கிளைகளை அமைப்பதற்குத்‌ தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுக்குறித்து முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில்,” மாநிலங்களில்‌ பல்வேறு நிலைகளில்‌ நீதிமன்றங்கள்‌ இருப்பினும்‌, உச்சநீதிமன்றத்தின்‌ தீர்ப்புகளை இந்தியாவில்‌ உள்ள அனைத்து நீதிமன்றங்களும்‌, அலுவலர்களும்‌ பின்பற்றும்‌ வகையில்‌ நீதித்‌ துறையின்‌ அமைப்பு உள்ளதைச்‌ சுட்டிக்காட்டி, மற்ற அம்சங்களில்‌, நீதித்துறையும்‌ நமது அரசியலமைப்பில்‌ பொதிந்துள்ள கூட்டாட்சித்‌ தத்துவத்தின்‌ உணர்வைப்‌ பிரதிபலிக்கும்‌ வகையில்‌ அமைய வேண்டும். இந்தப்‌ பின்னணியில்‌, உச்ச நீதிமன்றமும்‌, உயர்‌ நீதிமன்றங்களும்‌ நமது நாட்டின்‌ பன்முகத்தன்மையோடு அமைய வேண்டும்.

மேலும் படிக்க: 38 எம்.பிக்கள் வைத்து மார்த்தட்டும் திமுக.. இதை ஏன் செய்யவில்லை.. போட்டு உடைக்கும் எடப்பாடி..

நாட்டின்‌ பல்வேறு பிரிவுகளிலிருந்தும்‌ நீதிபதிகள்‌ நியமிக்கப்படும் போதுதான்‌, பன்முகத்‌ தன்மையும்‌, ஒட்டுமொத்த சமூகத்தின்‌ கண்ணோட்டங்களும்‌, உணர்வுகளும்‌ பிரதிபலிக்க ஏதுவாக இருக்கும்.  உச்ச நீதிமன்ற அமர்வில்‌ அனைத்து மாநிலங்களுக்கும்‌ விகிதாச்சார பிரதிநிதித்துவம்‌ அமைய வேண்டும். எனவே, உயர்‌ நீதிமன்றம்‌ மற்றும்‌ உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில்‌ சமூகப்‌ பன்முகத்தன்மையையும்‌, சமூக நீதியையும்‌ பேணும்‌ வகையில்‌, நீதிபதிகளை நியமிப்பதற்கான நடைமுறைக்‌ குறிப்பில்‌ அதற்கேற்ப உரிய மாற்றங்கள்‌ கொண்டுவரப்பட வேண்டும். 

புதுதில்லி, சென்னை, கொல்கத்தா மற்றும்‌ மும்பை ஆகிய இடங்களில்‌ உச்ச நீதிமன்றத்தின்‌ நிரந்தரக்‌ கிளைகளை அமைப்பதற்குத்‌ தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசியல்‌ நிர்ணய சபையில்‌ இது தொடர்பாக நடைபெற்றுள்ள விவாதங்களும்‌, பாராளுமன்ற நிலைக்குழுக்களின்‌ பரிந்துரைகளும்‌, பல்வேறு சட்ட ஆணையங்களின்‌ அறிக்கைகளும்‌ உச்ச நீதிமன்றத்தின்‌ கிளைகளை மாநிலங்களில்‌ அமைக்க வேண்டியதன்‌ அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. 

இராஜஸ்தான்‌, மத்தியப்‌பிரதேசம்‌, உத்தரப்‌ பிரதேசம்‌ மற்றும்‌ பீகார்‌ ஆகிய நான்கு உயர்‌ நீதிமன்றங்களில்‌, ஆங்கிலத்துடன்‌ இந்தி மொழியும்‌ அலுவல்‌ மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை உயர்‌ நீதிமன்றத்தின்‌ அலுவல்‌ மொழியாக தமிழை ஆக்குவதற்கு ஏதுவாக, தமிழ்‌ மொழியில்‌ தரமான சட்ட நூல்களை வெளியிடுவதற்கு மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தமிழக அரசின்‌ அலுவல்‌ மொழியான தமிழை, ஆங்கிலத்துடன்‌ சேர்த்து, சென்னை உயர்நீதிமன்றம்‌ மற்றும்‌ அதன்‌ மதுரைக்‌ கிளையின்‌ அலுவல்‌ மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: முந்தைய ஆட்சி கொண்டுவந்தாலும்..! நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்படும்... முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!