"முதலமைச்சர் இந்திரா காந்தி"! கூட்டத்தில் அழுத்தம் திருத்தமாக பேசிய அமைச்சர்! 

First Published Jun 21, 2018, 2:23 PM IST
Highlights
Talk to Minister Vijayapaskar Controversy


காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம், அதிமுக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம்,
ஆலங்குடியில் நடந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ஒரு கட்டத்தில்
முதலமைச்சராக இருந்த இந்திரா காந்திக்கு அஞ்சி, திமுக தலைவர் இரு அவைகளுக்கும் தெரியாமல் போய் வழக்கை வாபஸ் வாங்கி வந்து விட்டார் என்றார்.

முதலமைச்சர் இந்திரா காந்தி, அமைச்சர் விஜயபாஸ்கர் அழுத்தமாக கூறியதால், இந்திரா காந்தி எந்த மாநிலத்தில், எப்போது முதலமைச்சராக இருந்தார் என்று
கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

click me!