#BREAKING 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்தி முடிவை வெளியிடுங்கள்.. உச்சநீதிமன்றம் அதிரடி..!

Published : Jun 22, 2021, 12:07 PM ISTUpdated : Jun 24, 2021, 01:08 PM IST
#BREAKING 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்தி முடிவை வெளியிடுங்கள்.. உச்சநீதிமன்றம் அதிரடி..!

சுருக்கம்

தமிழகத்தில் விடுபட்ட 9 புதிய மாவட்டங்களில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிவை அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் விடுபட்ட 9 புதிய மாவட்டங்களில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிவை அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2016ம் ஆண்டில் நடைபெறவிருந்த உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்கள், 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலும், அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் நடைபெறவில்லை.  கொரோனா பெருந்தொற்றின் தீவிரம் குறைந்தவுடன், இந்த தேர்தல்களை நடத்துவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆளுநர் உரையில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில், விழுப்புரம், நெல்லை , தென்காசி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையத்திற்கு நிறைய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் கால அவகாசம் வழங்கப்படாது. மேலும் நாங்கள் மாநில அரசுக்கு 3 மாதம் அவகாசம் தருகிறோம். அதற்குள் 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தி முடித்து இருக்க வேண்டும், தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

சிறையில் இம்ரான் கானுக்கு மூளைச்சாவு..? கொட்டடியில் சித்திரவதை செய்யும் பாக்., பிரதமர்..!
தவெக வரலாறு படைக்கும்.. விஜய் தான் அடுத்த சி.எம்! செங்கோட்டையன் சூளுரை!