நாக்கை அடக்கிக்கோ. ' பெல்டுக்கு கீழ் இருப்பதை அறுப்பேன் ' நெல்லை கண்ணனுக்கு எச். ராஜா பகிரங்க எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Aug 12, 2021, 1:08 PM IST
Highlights

திமுகவில் இருப்போருக்கும், ஈவெரா பெரியாரிஸ்ட்டுகளுக்கும், நெல்லைக்கண்ணன்களுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது, இவர்கள் அனைவருக்கும் இருக்கிற ஒரே குறிக்கோள் இந்துமதத்தை அழிக்க வேண்டும் என்பதுதான். 

வாய் வியாபாரி  நெல்லைக்கண்ணன் தன்னைப் பற்றி அவதூறாக பேசுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் அவருக்கு அவர் பாணியிலேயே சரியான பதிலடி கொடுக்கப்படும் என்றும், பெல்டுக்கு கீழ் இருப்பதை அறுப்பேன் என்றும்  பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா கூறியுள்ளது  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சி ஆதரவாளரும், இலக்கியச் சொற்பொழிவாளருமான நல்லை கண்ணனுக்கும் ஏழாம் பொருத்தம் என்றே சொல்லலாம். அவர் கடந்த ஆண்டுக்கு முன்னர் பிரதமர் மோடியை குறித்து பேசிய சர்ச்சை பேச்சுக்கு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார். ஆனாலும் அவருக்கும் பாஜகவுக்கும் இடையே தொடர்ந்து வார்த்தை போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நெல்லைக்கண்ணன், பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா தன்னை மதுரை விமான நிலையத்தில் சந்தித்ததாகவும், அப்போது அவர் ஏன் தன்னை பிராமணன் என சாதிப்பெயரை சொல்லி திட்டுகிறீர்கள் என்று கேட்டதாகவும் நெல்லைக்கண்ணன் அந்த மேடையில் கூறினார். இது சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் எச். ராஜா வாய் வியாபாரி நெல்லை கண்ணன் தொடர்ந்து பிரதமரை அவமரியாதையாக பேசுவதும் அவரை போட்டு தள்ளு என்று பேசுவதும் தொடர்கிறது. அதனால் அவருக்கு மரியாதை கொடுத்து பேச வேண்டும் என்று அவசியமில்லை. பெரியாரிஸ்டுகளுக்கும், நெல்லைக்கண்ணன் போன்றவர்களுக்கும் எச். ராஜாவை பேசவில்லை என்றால் தூக்கம் வராதா.? நான் நெல்லைக்கண்ணனை ஏர்போர்ட்டில் பார்த்ததாக அவ் கூறியிருக்கிறார். அது முற்றிலும் பொய்.  நான் இதுவரை அவரை இரண்டே தடவை மட்டுமே சந்தித்திருக்கிறேன். ஒன்று தேவகோட்டை கந்த சஷ்டி விழா, மற்றொன்று பள்ளத்தூரில் ஆனால் இவரை மதுரை ஏர்போர்ட்டில் நான் பார்க்கவே இல்லை. நான் அவரை பார்த்ததாக கற்பனையாக கூறுகிறார். என்னை ஏன் பிராமணன் என்று சொல்லி திட்டுகிறார்கள் என்று நான் கேட்டதாக அவர் கூறியுள்ளார், அது பொய். என்னை எத்தனையோ பொறுக்கிஸ் பிகாரி என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு தமிழ் ஒழுங்காக பேசத் தெரியாது. 

திமுகவில் இருப்போருக்கும், ஈவெரா பெரியாரிஸ்ட்டுகளுக்கும், நெல்லைக்கண்ணன்களுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது, இவர்கள் அனைவருக்கும் இருக்கிற ஒரே குறிக்கோள் இந்துமதத்தை அழிக்க வேண்டும் என்பதுதான். நெல்லை கண்ணன் உண்மையான சைவமாக இருந்தால் அவர் இப்படி பேசமாட்டார். நான் இதுவரை 1983 லிருந்து பத்தாயிரம் பொதுக்கூட்டத்தில் பேசி இருக்கிறேன். ஆனால் ஒரு பொதுக் கூட்டத்திற்கு கூட நான் காசு வாங்கிகொண்டு பேசியதில்லை, ஏன் தமிழகத்தில்  குழந்தைகளுக்கு பெயர் வைக்க, கொடி ஏற்ற காசு வாங்கும் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் தலைவர்கள் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். நெல்லை கண்ணன் மாதிரி சொற்பொழிவுக்கு காசு வாங்குகிற, வாய் வியாபாரிகளும் இருக்கிறார்கள், இவர்கள் எல்லாம் வாயை வாடகைக்கு விடுபவர்கள், வாடகைக்கு யார் காசு கொடுத்தாலும், அவர்களுக்காக பேசக்கூடியவர்கள். 

நெல்லை கண்ணன் வாயை வாடகைக்கு விட்டு வயிறு கழுவுபவர். நான் இதுவரை யாரிடமும் ஏன் என்னை சாதிய சொல்லி பேசினாய் என்று கேட்பதே கிடையாது. நெல்லைக்கண்ணன் உடனடியாக நாக்கை அடக்க வேண்டும், இல்லை என்றால் உங்கள் ஸ்டைலிலேயே அடிக்கவும், Below the belt cut i am well prepared and equiped. (பெல்டுக்கு கீழ் உள்ளதை அறுப்பேன்) என்று கூறியுள்ளார். இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!