திண்டுக்கல் சீனிவாசன் மட்டுமில்ல.. பல அமைச்சர்கள் இப்படி தான் பண்ணுறாங்க..! தாறுமாறாக விமர்சித்த ஸ்டாலின்..!

By Manikandan S R SFirst Published Feb 6, 2020, 5:00 PM IST
Highlights

தமிழக எதிர்கட்சித்தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திண்டுக்கல் சீனிவாசன் மட்டுமில்லாது பல அமைச்சர்களும் இவ்வாறு தான் நடந்து கொள்வதாகவும் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் கூறியிருக்கிறார். 

நீலகிரி மாவட்டத்தில் இருக்கும்  முதுமலையில் யானைகள் நல்வாழ்வு முகாம் இன்று தொடங்கி நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைக்க அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று காலையில் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள், கட்சியினர் என ஏராளமானோர் வந்திருந்தனர். அப்போது அமைச்சர் சீனிவாசனின் கால் செருப்பு புல்வெளியில் மாட்டிக்கொண்டது. உடனே அவர் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு சிறுவனை அழைத்து செருப்பை கழட்ட சொல்லியிருக்கிறார். "டேய் வாடா.. செருப்பை கழட்டுடா" என அமைச்சர் சிறுவனை அனைவர் முன்னிலையிலும் அழைத்தார். சிறுவனும் செருப்பை அமைச்சரின் காலில் இருந்து கழட்டியிருக்கிறான். இதை அங்கிருந்த ஊடகங்கள் அனைத்தும் பதிவு செய்தன. இந்த காட்சிகள் தற்போது வைரலாகி அனைவரது கண்டனங்களையும் பெற்று வருகிறது.

தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர், பெரியவர்களை அழைத்தால் தவறாகிவிடும் என்பதால் தான் சிறுவனை அழைத்ததாகவும், அந்த சிறுவன் தனக்கு பேரன் மாதிரி என்றும் அமைச்சர் கூறியிருக்கிறார். தனது செயலில் எந்தவித உள்நோக்கமும் இல்லை எனவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருந்தார். இந்தநிலையில் அவரது செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

தமிழக எதிர்கட்சித்தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திண்டுக்கல் சீனிவாசன் மட்டுமில்லாது பல அமைச்சர்களும் இவ்வாறு தான் நடந்து கொள்வதாகவும் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் கூறியிருக்கிறார். அதே நேரத்தில் அமைச்சர் ஜெயக்குமார், வயது முதிர்வு காரணமாக தான் திண்டுக்கல் சீனிவாசன் சிறுவனை செருப்பை கழற்ற கூறியிருப்பார் என்றும் அதில் உள்நோக்கம் இருக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.

Also Read: பயபக்தியுடன் பெருவுடையாரை தரிசித்த சீமான்..! தம்பிகளுடன் குடமுழுக்கில் தாறுமாறு கொண்டாட்டம்..!.

click me!