இன்னைக்கு ஒரு முடிவு பண்ணிடுவோம் வாங்க! ஸ்டாலினுடன் கைகோர்க்கும் எடப்பாடி...!

 
Published : Mar 03, 2018, 06:42 AM ISTUpdated : Sep 19, 2018, 02:01 AM IST
இன்னைக்கு ஒரு முடிவு பண்ணிடுவோம் வாங்க! ஸ்டாலினுடன் கைகோர்க்கும் எடப்பாடி...!

சுருக்கம்

stalin meet edappadi today about cauvery

காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொலைபேசியில் பேசினார். இதையடுத்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில், கடந்த மாதம் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது. நடுவர் மன்றம் வழங்கிய நீரிலிருந்து 14.75 டிஎம்சி நீரை குறைத்து 177.25 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு ஒதுக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இது தமிழகத்திற்கு பாதிப்பாக இருந்தாலும், தமிழகம் வலியுறுத்திய காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதுதான் இறுதி தீர்ப்பு என்பதால், இந்த முறை அமைத்தாக வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. இதற்கிடையே காவிரி இறுதி தீர்ப்பு தொடர்பாக தமிழக அரசு சார்பில், அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு நடத்தப்பட்ட ஆலோசனையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் இணைந்து பிரதமரை நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட கூடாது என்பதில் கர்நாடகா விடாபிடியாக உள்ளது. இதுதொடர்பாக விவாதிக்க வரும் 7ம் தேதி கர்நாடக அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு ஆலோசிக்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக திமுக செயல்தலைவர் ஸ்டாலினுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தொலைபேசியில் பேசினார். 

இதையடுத்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து பேச உள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!