ஏ புள்ள! அன்னைக்கு நான் தத்துப்பிள்ள, இன்னைக்கு நான் கறிவேப்பில: யார், யார் சொன்னது?!

First Published Mar 2, 2018, 5:14 PM IST
Highlights
A point Im going to get it to you today I will bake it today who and who said


உலகின் மிக சிறந்த சொல் ‘செயல்’தான். ஆனாலும் செயலுக்கு  இணையான வீரியங்கள் சொல்லுக்கும் உண்டு. அதிலும் சமூகத்தில் முக்கிய நபர்கள் சொல்லும் சொல்லுக்கு  ஏற்படும் பக்க விளைவுகளும், வீரியமும் தனியே.

அந்த வீரியமிக்க ‘சொற்களை’ டீல் செய்வதுதான் இந்த பகுதி.

*    அ.தி.மு.க.வில் நடப்பது பதவி சண்டை இல்லை. குடும்பங்களில் நடக்கும் பங்காளி சண்டை. இந்த பிரச்னைகள் விரைவில் முடியும்.
-    ஆர்.பி.உதயகுமார்.

*    ஊழல் இல்லாத நிர்வாகம்  குறித்து, பா.ஜ.க. அரசு பேசுகிறது. ஆனால், அரசின் செயல்பாட்டை பார்க்கும்போது, வலுவான லோக்பாலை கொண்டு வர விரும்பவில்லை என தெரிகிறது.
-    அன்னா ஹசாரே.

*    ம.தி.மு.க.வின் உறுப்பினர்களாக இருக்கிற இணையதள நண்பர்கள், தற்போது தோழமை கட்சிகளுக்கு எதிராக எந்த விமர்சனத்தையும் செய்ய கூடாது.
-    வைகோ

*    தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தினமும் ஒரு மணி நேரம் ஹிந்தி கற்றுக் கொள்கின்றனர். வருங்காலத்தில் ‘ஹிந்தி வாழ்க’ என அவர்கள் கோஷம் எழுப்புவர்.
-    புகழேந்தி

*    சமூக நலன் கருதி, இனி கூடுமானவரை வன்முறை சார்ந்த காட்சிகளை திரைப்படங்களில் காட்டுவதை, திரைப்பட துறையினர் தவிர்க்க வேண்டும்.
-    சரத்குமார்.

*    காவிரிப் படுகையை ஓர் எண்ணெய் பீப்பாயாக மாற்றும் முயற்சிக்கு துணை போகும் விதமாக பேசுவதும், நடந்து கொள்வதும் ஏற்புடையதல்ல.
-    கமல்ஹாசன்

*    நான் தான் கருணாநிதியின் தத்துப்பிள்ளை, ஆனால் இன்று நான், தி.மு.க.வால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கறிவேப்பிலையாகிவிட்டேன்.
-    ராஜேந்தர்

*    மத்திய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி தினமும் விமர்சிக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் குரலைத் தடுக்கவும், அவரது குடும்பத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்திலேயே கார்த்தி சிதம்பரத்தின் கைது நடந்துள்ளது.
-    திருநாவுக்கரசர்

*    நம் அன்றாட வாழ்வில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்து, அந்த அனுபவங்களை திரைப்படத்தில் பிரதிபலிக்கும் குணம் கொண்டவர் நடிகர் சல்மான் கான்.
-    காத்ரீனா கைஃப்

*    தமிழ் மொழியை தெரியாதவர்களுக்கு சர்க்கரை என்ற சொல் இரைச்சலாக இருக்கும், ஆனால் நிலவேம்பு எனும் சொல்தான் காதுக்கு இனிப்பாக இருக்கும்.
-    மதன் கார்க்கி

click me!