முதல்வர் கனவில் ஸ்டாலின்.. மத்தியில் திராவிட மாடல் ஆட்சி... அல்லு தெறிக்கவிடும் டி.ஆர் பாலு.

By Ezhilarasan BabuFirst Published May 19, 2022, 8:23 PM IST
Highlights

விரைவில் மத்தியில் திராவிட ஆட்சி அமையும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாஜகவை எதிர்த்து திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் திராவிட மாடலை முன்னிறுத்தி அணிவகுக்க உள்ளதாக பேசப்பட்டு வரும் நிலையில் பாலு இவ்வாறு கூறியுள்ளார்.

விரைவில் மத்தியில் திராவிட ஆட்சி அமையும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாஜகவை எதிர்த்து திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் திராவிட மாடலை முன்னிறுத்தி அணிவகுக்க உள்ளதாக பேசப்பட்டு வரும் நிலையில் பாலு இவ்வாறு கூறியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக அரசியல் ரீதியாக மத்தியில் ஆட்சி மாற்றத்தை வலியுறுத்திய்மெ தேசிய அளவில் அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார் ஸ்டாலின். எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என பாஜக ஆட்சியில் இல்லாத மாநில முதலமைச்சர்கள் கங்கணம் கட்டி செயல்பட்டு வருகின்றனர். அதில் முதலமைச்சர் மு. க ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி,  தெலுங்கானா மாநிலம் முதல்வர் சந்திரசேகர் ராவ், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் அதி தீவிரம் காட்டி வருகின்றனர்.

பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் வுடன் இணைந்து கூட்டணி, அல்லது பாஜக வெற்றியை தடுக்க வீழ்த்த பாஜக அல்லாத மாநிலங்கள் இணைந்து 3 வது அமைப்பது என்ற முயற்சிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. அதில் முதலும் முனைப்பும் காட்டி வருபவராக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார். இந்நிலையில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக திராவிட மாடல் என்ற முழக்கத்தை முன்னிறுத்தி முதல்வர் ஸ்டாலின் தனது அரசியலை முன்னெடுத்து வருகிறார். டெல்லியில்  திமுகவிற்கு தலைமையகம் அமைத்து திமுகவை தேசிய கட்சியாக மாற்றும் முயற்சியில் அவர் இறங்கி உள்ளார். அவர் அறிவித்து வரும் ஒவ்வொரு திட்டமும் திராவிட மாடலின் அடையாளமாக உருவகப்படுத்தப்படுகிறது. திராவிட மாடல் ஆட்சி நாடு முழுவதும் பரவும் என திமுகவினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை ஆதம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு திராவிட மாடல் என்பது மாநில சுயாட்சி, அந்த மாநில சுயாட்சி கொள்கையோடு சமூக நீதியும் இணைந்ததுதான் திராவிட மாடல், முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி விரைவில் மத்தியில் ஆட்சி அமைக்கும், அப்போது மாநில சுயாட்சி உறுதி செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்தார். இது திமுக நிச்சயம் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என முனைப்பில் உள்ளது என்பதையும், முதல்வர் ஸ்டாலின் பாஜகவுக்கு மாற்று சக்தியாக திமுகவை வளர்த்தெடுக்க வேண்டும் என்றும், முதல்வர் கனவில் உள்ளாரா என்பதையும் பாலுவின் பேச்சு சொல்லாமல் சொல்லி உள்ளது.
 

click me!