மக்கள் முதல்வராக மாறிய ஸ்டாலின்.. விவசாயிகளுக்கு 1597 கோடி18 லட்சம் அள்ளிக் கொடுத்து அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Oct 18, 2021, 1:07 PM IST
Highlights

விவசாயிகளுக்கான இந்த இழப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட 6 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று 10 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் வேளாண் உழவர் நலத்துறை சார்பில் சம்பா பருவ பயிர்களுக்கான இழப்பீடு தொகையாக, 1597 கோடியே 18 லட்சம்  ரூபாயினை 6 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கும் விதமாக 10 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான சான்றிதழை வழங்கி தொடங்கி வைத்தார்.வேளாண்மையில் தொடர் வளர்ச்சியானது ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும், உணவு பாதுகாப்புடன் கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் அவர்களுக்கு தொடர் வருமானம் கிடைக்கவும் மாநில அளவில் நிலையான பொருளாதார வளர்ச்சி அடைவதற்கும் வேளாண்மையில் நீடித்த வளர்ச்சியை ஏற்படுத்துவது மிகவும் இன்றியமையாததாகும். 

இதையும் படியுங்கள்: அடி தூள்.. மாணவர்களுக்கு இதைவிட மகிழ்ச்சியான செய்தி வேறு என்ன இருக்க முடியும். வீட்டுக்கே வரபோகும் ஆசிரியர்கள்

இதனை கருத்தில் கொண்டு தமிழ் நாட்டின் வரலாற்றிலேயே முதல் முறையாக தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசால் வேளாண்மைத் துறைக்கென 2021- 22 ஆம் ஆண்டிற்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி வேளாண்மைத்துறை என்ற பெயரினை வேளாண்மை உழவர் நலத்துறை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து நிலையான வளர்ச்சிக்கு வழி வகுத்து வருகிறது.2020 -2021 ஆம் ஆண்டில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குறுவை சம்பா மற்றும் குளிர் கால பருவ பயிர்கள்,  42.75  லட்சம் ஏக்கர் பரப்பளவு பயிர் காப்பீடு செய்வதற்காக 25.76 லட்சம் விவசாயிகள் பதிவு செய்தனர். குறுவை (காரிப்) பருவத்திற்கான இழப்பீட்டு தொகையாக ரூபாய் 133. 07  கோடி 2,02, 335 விவசாயிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: விஜயபாஸ்கர் வீட்டு வாசலில் பரபரப்பு.. போலீசுடன் மோதிய அதிமுக வழக்கறிஞர் அணி.. அசைக்க முடியாது என சவால்.

தமிழக முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசால் நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 2021-2022 ஆம் ஆண்டில் பயிர் காப்பீட்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக ரூபாய் 2327 கோடி நிதியினை 2021-2022 ஆம் வேளாண் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 2020-2021 ஆம் ஆண்டு சம்பா பருவ பயிர்களுக்கான தமிழ்நாடு அரசின் பயிர் காப்பீட்டு கட்டணம் மானியமாக ரூபாய் 1553.15  கோடி காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இதன் காரணமாக 2020-2021 ஆம் ஆண்டு சம்பா பருவ பயிர்களுக்கு இழப்பீட்டு தொகையான 1597.18  கோடியில் இப்ஃப்கோ டோகியோ பொது காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் ரூபாய் 1089.53  கோடியும், இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் ரூபாய் 507.65  கோடியும் சுமார் 6 லட்சம் விவசாயிகளுக்கு தற்போது ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான இந்த இழப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட 6 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று 10 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கி தொடங்கி வைத்தார். 

மேலும் 2021-2022 ஆம் ஆண்டு சம்பா பருவ பயிர்களை காப்பீடு செய்ய 26-8-2021 அன்று தமிழ்நாடு அரசால் 16 -8-2021 ஆம் நாளிட்ட வேளாண்மை உழவர் நலத்துறை அரசாணை எண்-141 ல் அரசாணை வெளியிடப்பட்டு விவசாயிகள் சம்பா பருவ பயிர்களுக்கான காப்பீட்டு கட்டணத்தை செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செலுத்தி வருகின்றனர். 13-10-2021  வரை 61,871  விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய பதிவு செய்யப்பட்டு, 67,556 ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகளின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் பயிர் காப்பீடு திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பதிவு செய்து தங்கள் பெயரை காப்பீடு செய்து கொள்ளுமாறு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளனர் என அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!