லாரிகள் வேலைநிறுத்தம் திரும்ப பெறப்படுமா? - சேலத்தில் நாளை ஆலோசனைக் கூட்டம்

Asianet News Tamil  
Published : Mar 31, 2017, 08:08 PM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
லாரிகள் வேலைநிறுத்தம் திரும்ப பெறப்படுமா? - சேலத்தில் நாளை ஆலோசனைக் கூட்டம்

சுருக்கம்

southern india lorry association meeting held salem

தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது  குறித்து சேலத்தில் நாளை லாரி உரிமையாளர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். 

டீசல் மீதான வாட் வரி, காப்பீட்டுக் கட்டணம் அதிகரிப்பு உள்ளிட்டவைகளைக் கண்டித்து தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் சுமார் 25 லட்சத்திற்கும் அதிகமான லாரிகள் இயங்காததால் சரக்கு போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் தட்டுப்பாடு நிலவுகிறது. 

இதற்கிடையே போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இந்தச் சூழலில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நாளை நடைபெறுகிறது. அப்போது போராட்டத்தை தொடர்வது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

CM Vijay Says No Entry: அப்போ "அல்வா"தானா.! அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு "நோ என்ட்ரி"? கதவை இழுத்து மூடிய முதல்வர் விஜய்.?!
ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!