கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பாசமிக்கவர் சோ - அழகிரி புகழாரம்

First Published Dec 7, 2016, 12:47 PM IST
Highlights


புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் சோ வின் மறைவுக்கு அவரது அரசியல் நண்பர்களும், திரையுலக நண்பர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் சோவுடனான நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு,க,அழகிரி, சோ வின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய  அழகிரி, எனது நெருங்கி நண்பர் சோ விள் மறைவு தனக்கு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக தெரிவித்தார்.

கலைஞர் கருணாநிதிக்கும் சோவுக்கும் எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பாசத்தோடும் அன்போடும் இருந்தவர் என்று தனது வருத்த்த்தைக் தெரிவித்துக் கொண்டார்,

click me!